News March 22, 2024

தஞ்சாவூர் அருகே போலீசார் அணிவகுப்பு

image

அய்யம்பேட்டையில் வருகின்ற 19ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு அய்யம்பேட்டை பாபநாசம் காவல்துறை சார்பில் காவல் கண்காணிப்பாளர் அசோக் தலைமையில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். அய்யம்பேட்டையில் தொடங்கி 5 கிலோமீட்டர் சுற்றளவிற்கு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Similar News

News September 8, 2025

தஞ்சாவூர்: ஓட ஓட வெட்டி படுகொலை

image

பேராவூரணி பாஜக ஒன்றிய தலைவர் ராஜேஷ் குமார் என்பவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் 15 லட்சம் கடன் தொகை பெற்றுள்ளார். தலைமறைவான சக்திவேலின் தம்பி பிரவீன் குமார் நேற்று நள்ளிரவு ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக வாட்டாத்தி கோட்டைபோலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்துவிட்டு ராஜேஷ் குமார் காவல்நிலத்தில் சரணடைந்தார்.

News September 8, 2025

தஞ்சாவூரில் வெளுத்து வாங்கிய மழை

image

தஞ்சாவூர்: வானிலை ஆய்வு மையம் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவித்திருந்தது. அதன் படி நேற்று இரவு தஞ்சை மற்றும் அதன் மாவட்டத்தில் பிற இடங்களான திருவையாறு, பூதலூர், பாபநாசம், கும்பகோணம், பட்டுக்கோட்டை, போன்ற பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. மழையால் தற்போது அறுவடை பணிகளை ஆரம்பித்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

News September 8, 2025

தஞ்சாவூர் மக்களே அவங்க திரும்பவும் வராங்க!

image

தஞ்சாவூர் மக்களே உங்கள் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட மாவட்டம் முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி நாளை 09.09.2025 ஆம் தேதி நமது தஞ்சை மாவட்டத்தில் திட்ட முகாம் நடைபெறும் இடங்களை பார்க்கலாம். ⏩தஞ்சாவூர், ⏩பட்டுக்கோட்டை , ⏩ஒரத்தநாடு, ⏩திருமங்கலகோட்டை , ⏩கும்பகோணம், ⏩பட்டிஸ்வரம், ⏩அம்மாபேட்டை ⏩திருக்கருக்காவூர், ⏩பேராவூரணி ஆகிய பகுதிகளில் நடைபெறும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!