News April 8, 2025
தங்க நகையை பத்திரமாக ஒப்படைத்த சிறுமிகள்

திருத்தணி முருகன் கோயிலில், நேற்று (ஏப்ரல் 7) திரளான பக்தர்கள் வருகை தந்தனர். கோயில் பார்க்கிங் பகுதியில் ரூ.1,50,000 மதிப்புள்ள தங்க காப்பு ஒன்று கிடந்துள்ளது. அதை எடுத்த சிறுமிகள் பத்திரமாக அங்கு பணியில் ஈடுபட்டிருந்த போலீசரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, நகையை தவறவிட்ட பக்தர் போலீசாரிடம் வந்து புகார் அளிக்க வந்தபோது, போலீசார் அந்த நகைகளை ஒப்படைத்து சிறுமிகளை பாராட்டி வாழ்த்தினர். ஷேர் பண்ணுங்க
Similar News
News November 6, 2025
திருவள்ளூர்: படகு வழியே சுடுகாட்டிற்கு செல்லும் அவலம்!

பழவேற்காடு, கோட்டைகுப்பம் மீனவ கிராமத்தில், 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியினருக்கான சுடுகாட்டிற்கு செல்வதற்கு அங்குள்ள ஏரியின் கழிமுகப்பகுதியை கடந்து தான் செல்ல வேண்டியுள்ளது. இதனால் மழை காலங்களில் சடலங்களை படகில் கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோட்டைகுப்பம் கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
News November 6, 2025
திருவள்ளூர் மாவட்டத்திற்கு புதிய முதன்மைக் கல்வி அலுவலர்

திருவள்ளூர் மாவட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலராக கற்பகம் இன்று பொறுப்பேற்றார். இவர் செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து பணி மாறுதல் பெற்று, திருவள்ளூர் மாவட்டத்திற்கு முதன்மைக் கல்வி அலுவலராக பணியேற்றுள்ளார். அவருக்கு ஆசிரியர்கள், ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளித்தனர். பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
News November 6, 2025
திருவள்ளூர்: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

திருவள்ளூர் மக்களே, கேஸ் சிலிண்டர் புக் செய்ய நீங்கள் நேரில் செல்ல தேவையில்லை. உங்கள் வாட்ஸ்அப் மூலமாக எளிதாக & விரைவான புக் செய்யலாம். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களுக்கு, வாட்ஸப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். ஷேர் பண்ணுங்க!


