News October 22, 2025

தங்க கவச அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்!

image

நாமக்கல் மாநகரில் மையப்பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோவிலுக்கு எதிரே எழுந்துள்ள, உலகப் புகழ்பெற்ற நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலில், ஐப்பசி மாதத்தின் புதன்கிழமையை முன்னிட்டு சிறப்பு சொர்ண அபிஷேகம் இன்று (22.10.2025) காலை நடைபெற்றது. அப்போது தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Similar News

News October 22, 2025

நாமக்கல்லில் மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி!

image

நாமக்கல் அரசு ஆண்கள் (தெற்கு) மேல்நிலை பள்ளியில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி வரும் அக்.30ந் தேதி காலை 09.30 மணி முதல் 1 மணி வரை 6 முதல் 12 ஆம் வகுப்பு அரசு/தனியார் பள்ளி மாணவர்களுக்கும், பிற்பகல் 01.30 மணி முதல் கல்லூரி மாணவர்களுக்கும் பேச்சுப் போட்டிகள் தனித்தனியே நடத்தப்படவுள்ளன. இப்போட்டியில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பெறும் என ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.

News October 22, 2025

நாமக்கல்: நான்கு சக்கர வாகன ரோந்து அதிகாரிகள் விவரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று அக்டோபர்-22 நாமக்கல்-(தேசிங்கன் – 8668105073), வேலூர் – (ரவி – 9498168482), ராசிபுரம் – (சின்னப்பன்- 9498169092), குமாரபாளையம் – (செல்வராஜு – 9994497140), ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

News October 22, 2025

நாமக்கல் முட்டை விலையில் மாற்றம் இல்லை

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் கிளைக் கூட்டம் இன்று (அக்.22) நாமக்கல்லில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.25 ஆக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக நிலவி வரும் மழை மற்றும் குளிர் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்துள்ள நிலையில், நாளை (அக்.23) முதல் முட்டையின் விலை ரூ.5.25 ஆகவே நீடிக்கும் என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

error: Content is protected !!