News August 18, 2025
தங்ககவச அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சிநேயர்!

நாமக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஆஞ்சிநேயருக்கு பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம் போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, தங்ககவச சிறப்பு அலங்காரத்துடன், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
Similar News
News March 6, 2026
நாமக்கல்லில் உயிர் காக்கும் முக்கிய வாட்ஸ்அப் எண்!

நாமக்கல் மக்களே விபத்து காலங்களில் அவசர சிகிச்சைக்காக ‘108’ ஆம்புலன்ஸை அழைப்பதில் ஏற்படும் முகவரி சிக்கல்களைத் தவிர்க்க, தமிழக சுகாதாரத் துறை 94450 30725 என்ற புதிய வாட்ஸ்அப் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் விபத்து நிகழ்ந்த இடத்தின் (Location) தகவலைத் துல்லியமாகப் பகிர்ந்து, ஆம்புலன்ஸ் சேவையை விரைவாகப் பெற முடியும். மனித உயிர்களைக் காக்கும் இந்த மிக முக்கியமான தகவலை SHARE பண்ணுங்க!
News March 6, 2026
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமில்லை

நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை மாற்றமின்றி ரூ.4.30 ஆக நீடிக்கிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் பண்ணையாளர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டது. பிற மண்டலங்களில் விலை மாற்றம் இல்லாததால் இங்கும் தற்போது விலையை மாற்ற தேவையில்லை என முடிவு செய்யப்பட்டது. மேலும் கறிக்கோழி விலை கிலோ ரூ.133, முட்டைக் கோழி விலை ரூ.62 என நிர்ணயிக்கப்பட்டது.
News March 6, 2026
நாமக்கல்லில் இளைஞர்களை இழுக்கும் திமுக!

நாமக்கல் மாவட்டம் வேலூர் பேரூரை சேர்ந்த மைலேஷ் தலைமையில், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எஸ். மூர்த்தி முன்னிலையில், 50 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்வின்போது, பேரூர் செயலாளர்கள் முருகன், ரமேஷ்பாபு, தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் லோகேஸ்வரன் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


