News September 15, 2024
தக்கலை அருகே 1100 மெகா வாட் நீரேற்று மின் திட்டம்

தமிழக மின் வாரியத்தின் துணை நிறுவனமான பசுமை எரிசக்தி கழகம் கன்னியாகுமரி மாவட்டத்தில் 1,100 மெகாவாட் திறனில் தக்கலை அருகே வேளிமலை நீரேற்று மின் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதற்கு, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பாய்வு அனுமதி பணிகளை மேற்கொள்ள தகுதியான நிறுவனத்தை தேர்வு செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது என அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Similar News
News August 14, 2025
குமரி: கணவரால் பிரச்சனையா.? உடனே CALL .!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி, கன்னியாகுமரி மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 04652-278404-ஐ அலுவலக நேரங்களில் அழைத்து புகாரளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News August 14, 2025
ஆக.18ல் முன்னாள் படை வீரர் குறைதீர் கூட்டம்

குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆகஸ்ட்.18ம் தேதி காலை 9 மணிக்கு ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவரை சார்ந்தோர் தங்கள் கோரிக்கை விண்ணப்பங்களை ஆட்சியரிடம் சமர்ப்பித்து பயன் பெறலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 14, 2025
குமரி: உங்க வாட்டாச்சியர் போன் நம்பர் தெரியுமா?

கன்னியாகுமரி மக்களே.. உங்களது வட்டாட்சியரை தொடர்புகொள்ள இந்த எண்களை மறக்காமல் SAVE பண்ணிக்கோங்க…
▶️வட்டாச்சியர், அகஸ்தீஸ்வரம் – 04652233167
▶️வட்டாச்சியர், தோவாளை – 04652282224
▶️வட்டாச்சியர், கல்குளம் – 04651250724
▶️வட்டாச்சியர், விளவங்கோடு – 04651260232
▶️தனி வட்டாச்சியர்,(சபாதி)அகஸ்தீஸ்வரம் – 04652233167
▶️தனி வட்டாச்சியர்,(சபாதி)தோவாளை – 04652282224
மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.