News May 4, 2024
தகராறில் ஈடுபட்ட சம்பவத்தில் காவலர் பணியிடை நீக்கம்

ஓஎம்ஆர் பகுதியில் பாஸ்ட் புட் கடை நடத்தி வருபவர் மணிகண்டன். நேற்று பட்டினப்பாக்கம் அருகே காரில் சென்று கொண்டிருந்தபோது முந்தி செல்வதில் ஏற்பட்ட தகராறில் இவரை 4 பேர் சரமாரி தாக்கினர். இதில் ஈடுபட்ட 3 பேரை பட்டினபாக்கம் போலீசார் கைது செய்த நிலையில் ஆயுதப்படை காவலர் கோபிநாத் தாக்குதலில் ஈடுபடாத காரணத்தினால் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
Similar News
News November 23, 2025
சென்னை மக்களே 4 வகையான கடன்களை பெறலாம்!

சிறுபான்மையினர்களுக்கு, குறைந்த வட்டியில் தனிநபர் கடன் (ரூ.30 லட்சம்), சுயஉதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன் (ரூ.1 லட்சம்), கைவினை கலைஞர்களுக்கான கடன் (ரூ.10 லட்சம்), கல்வி கடன் வழங்கப்பட உள்ளன. ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் ரூ.3 லட்சம், நகர்புறங்களில் ரூ.8 லட்சம் இருக்க வேண்டும். சென்னை மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் தெரிந்து கொள்ளலாம் (044-25241002 9445477825). ஷேர் பண்ணுங்க
News November 23, 2025
சென்னையில் நாணயங்களை விழுங்கிய 110 குழந்தைகள்

சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் நடப்பாண்டில் நாணயங்களை விழுங்கிய 110 குழந்தைகளுக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 3 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு பட்டன், பேட்டரி போன்ற சிறிய பொருள்கள் விளையாட வழங்கக் கூடாது. அவை எளி–தில் சுவாசப் பாதைக்குள் சிக்கிக் கொள்ளக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
News November 23, 2025
சென்னை: ரயிலில் விடப்பட்ட பச்சிளம் குழந்தை

கேரள மாநிலம் ஆழப்புழாவில் இருந்து சென்னைக்கு இன்று(நவ.22) அதிகாலை வந்த விரைவு ரயிலில் 10 மாத பெண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. பயணி ஒருவர் குழந்தையை கண்டெடுத்து டிக்கெட் பரிசோதகரிடம் தெரிவிக்க, பின்னர் அரசு குழந்தைகள் நலக் குழுமத்திடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.


