News March 20, 2025
டேங்கர் லாரியில் மோதி மினி லாரி ஓட்டுநர் பலி

திருச்சி முசிறி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் மினி லாரியில் வாழைப்பழம் லோடு ஏற்றி கொண்டு திருச்சியிலிருந்து கோயம்பேடு நோக்கி வந்துகொண்டிருந்தார். நேற்று அதிகாலை மறைமலைநகர் அடுத்த பொத்தேரி பேருந்து நிலையம் அருகே வந்தபோது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த டேங்கர் லாரியின் பின்புறத்தில் மினி லாரி மோதியது. இதில் மினி லாரி ஓட்டுனர் ராஜேஷ் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News September 19, 2025
செங்கை: TCS, WIPRO, Cognizantல் பயிற்சியுடன் வேலைவாய்ப்பு

ன்தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டம் மூலம் ServiceNow Developer மற்றும் Salesforce Developer சான்றிதழ் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. குறுகிய கால இந்த பயிற்சியில் உதவித்தொகை மற்றும் தங்கும் இடம் ஏற்பாடு செய்து தரப்படும். B.sc (computer/IT), B.E/B.Tech படித்த மாணவர்கள் <
News September 19, 2025
செங்கல்பட்டு: 12th போதும் ரூ.81,000 சம்பளம்

எல்லைப் பாதுகாப்புப் படையில் ரேடியோ ஆபரேட்டர் (RO) & ரேடியோ மெக்கானிக் (RM) பிரிவில் கான்ஸ்டபிள் பணிக்கு 1,121 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ITI, 12th படித்தவர்கள் படித்திருந்தால் போதும். இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை வழங்கப்படும். செப்.23 வரை இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <
News September 19, 2025
செங்கல்பட்டு: பெற்ற தாயை தீ வைத்து எரித்த மகன்

செங்கல்பட்டு நத்தம் பகுதியை சேர்ந்த எஸ்தர்(65) என்பவரது மகன் விக்டர் ராஜேந்திரன் (45). திருவள்ளூர், திருவாலங்காடு பகுதியில் வசித்த இவர் கடந்த 14ம் தேதி செங்கல்பட்டிற்கு வந்த தனது தாய் எஸ்தரிடம் குடிக்க பணம் கேட்டு கொடுக்காததால் அவர் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். சிகிச்சையில் இருந்த எஸ்தர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதனால் கொலை வழக்காக மாற்றி போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.