News November 18, 2025

டெல்லி ஐகோர்ட், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

image

டெல்லியில் 4 நீதிமன்றங்கள், CRPF வீரர்களின் குழந்தைகள் பயிலும் பள்ளி உள்ளிட்ட இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சாகேத், பாட்டியாலாவில் மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனை நடத்தி வருவதால் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. கடந்த 10-ம் தேதி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பில் 15 பேர் பலியானது கவனிக்கத்தக்கது.

Similar News

News November 18, 2025

SIR-ஆல் அதிமுக கூட்டணி ஜெயிக்கும்: Ex. அமைச்சர்

image

பிஹார் வெற்றிக்கு SIR தான் காரணம். அதேபோல TN-லும் அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெறும் என திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். SIR-ஐ எதிர்ப்பது தேவையற்றது என கூறிய அவர், இப்பணி நடந்தால் தமிழ்நாட்டில் 1 கோடிக்கும் மேற்பட்ட போலி வாக்குகள் நீக்கப்படும் என கூறியுள்ளார். அத்துடன், வரும் தேர்தலில் அதிமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும், EPS CM ஆவார் என உறுதியாக தெரிவித்துள்ளார்.

News November 18, 2025

SIR-ஆல் அதிமுக கூட்டணி ஜெயிக்கும்: Ex. அமைச்சர்

image

பிஹார் வெற்றிக்கு SIR தான் காரணம். அதேபோல TN-லும் அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெறும் என திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். SIR-ஐ எதிர்ப்பது தேவையற்றது என கூறிய அவர், இப்பணி நடந்தால் தமிழ்நாட்டில் 1 கோடிக்கும் மேற்பட்ட போலி வாக்குகள் நீக்கப்படும் என கூறியுள்ளார். அத்துடன், வரும் தேர்தலில் அதிமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும், EPS CM ஆவார் என உறுதியாக தெரிவித்துள்ளார்.

News November 18, 2025

கோவை வரவுள்ள PM மோடிக்கு CM ஸ்டாலின் முக்கிய கடிதம்

image

நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17%-லிருந்து 22%-ஆக உயர்த்தக் கோரி PM மோடிக்கு CM ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், செறிவூட்டப்பட்ட அரிசி மாதிரி எடுக்கும் அதிகாரத்தை தென்னிந்திய மாநிலங்களில் உள்ள இந்திய உணவுக்கழக அதிகாரிக்கு வழங்கிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். PM மோடி விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக கோவை வரும் நிலையில் CM இக்கடிதத்தை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!