News November 12, 2025

டெல்லியில் 50 உயிர்களை காப்பாற்றிய ஓட்டுநர்

image

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. டெல்லியில் இதுபோல, ஏற்கெனவே 2005-ல் நடந்த குண்டு வெடிப்பில் 62 பேர் உயிரிழந்தனர். அப்போது அரசு பஸ்ஸில் வெடிகுண்டு இருப்பது குறித்து அறிந்த ஓட்டுநர் குல்தீப் சிங், தன் உயிரை பணயம் வைத்து பயணிகளை பாதுகாப்பாக வெளியேற்றினார். அதன் பிறகு வெடிகுண்டை தூக்கிவீசும் முயற்சியில் அவர் ஒற்றை கண் பார்வை மற்றும் கை, செவித்திறனை இழந்தார்.

Similar News

News March 8, 2026

5,000 பணியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க

image

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் 5,000 அப்ரண்டீஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு துறையில் டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ₹15,000 வழங்கப்படும். ஆன்லைன் தேர்வு, தாய் மொழியில் பேச்சு திறன் அடிப்படையில் இப்பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். விருப்பமுள்ளவர்கள் ஏப்ரல் 3-ம் தேதிக்குள் இந்த <>லிங்க்கில்<<>> விண்ணப்பிக்கவும். SHARE.

News March 8, 2026

பெண் போராட வேண்டியிராத உலகை படைப்போம்: கமல்

image

பெண்களுக்கு சம வாய்ப்புகளையும், சம அதிகாரத்தையும் பகிர்ந்தளிக்கையில் ஒட்டுமொத்த சமுதாயமும் வெற்றி பெறுகிறது என கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார். மகளிர் தினத்துக்கு வாழ்த்து தெரிவித்த அவர், மகளிர் தங்கள் உரிமைகளுக்காகப் போராட வேண்டியிராத சமத்துவ உலகை படைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும்,
ஒவ்வொரு பெண்ணும் தனக்கான சிறகுகளைப் பெறுவதை உறுதி செய்வோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News March 8, 2026

விஜய்க்கு அடுத்த அதிர்ச்சி..

image

‘ஆட்சியில் பங்கு’ என்ற அஸ்திரத்தை விஜய் வீசியதால், பல கட்சிகள் தவெகவுடன் கூட்டணி வைக்க ஆர்வம் காட்டின. ஆனால் இதுவரை, எந்த கட்சியும் கூட்டணி வைக்க முன்வரவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்துள்ள விஜய், தவெகவை நெருங்கி வந்த கட்சிகளுடன் உரிய முறையில் பேசி கூட்டணியில் சேர்க்காமல் இப்படி நமக்கு இருந்த வாய்ப்புகள் அனைத்தையும் கோட்டை விட்டுவிட்டீர்களே என்று ஆதவ் மீது அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!