News November 3, 2025
டெல்டாவில் தனி கவனம் செலுத்தும் EPS

2021-ல் கொங்குவில் அதிக இடங்களை கைப்பற்றிய அதிமுக, டெல்டா, தென் தமிழகத்தில் கோட்டை விட்டது. தற்போது பாஜகவுடன் கூட்டணி அமைந்ததால், 2026-ல் தென்மாவட்டங்களில் கனிசமான வாக்குகளை பெறலாம் என நம்பும் EPS , நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தனிக்கவனம் செலுத்தி, பூத் வாரியாக தேர்தல் பணிகளை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளார். இதுதொடர்பாக மாவட்டப் பொறுப்பாளர்களுடன் EPS ஆலோசித்துள்ளார்.
Similar News
News November 3, 2025
‘இபிஎஸ்-க்கு நோபல் பரிசு’

தமிழகத்தில் மன்னராட்சிக்கு முடிவு கட்டி, மக்களாட்சியை கொண்டுவர EPS முடிவுரை எழுதிக் கொண்டிருக்கிறார் என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். ஜனநாயகத்தை வளர்க்க அவர் பாடுபட்டு வருகிறார் என்றும் இதற்காக அவருக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் எனவும் அவர் சிபாரிசு செய்துள்ளார். முன்னதாக, துரோகத்துக்கான நோபல் பரிசு EPS-க்கு கொடுக்கவேண்டும் என செங்கோட்டையன் கூறியிருந்தார். இதை பற்றி உங்கள் கருத்து?
News November 3, 2025
இந்தியாவின் அண்டை நாடுகள் அணு ஆயுத சோதனை

சீனாவும், பாகிஸ்தானும் ரகசியமாக அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இதை குறிப்பிட்டு, அமெரிக்கா அணு ஆயுத சோதனை நடத்த உள்ளதை வெளிப்படையாக அறிவித்ததை நியாயப்படுத்தியுள்ளார். மேலும், ஆபரேஷன் சிந்தூரின் போது, இந்தியா – பாகிஸ்தான் இடையே அணு ஆயுத போர் மூளும் அபாயம் இருந்ததாகவும், தான் குறுக்கிடவில்லை என்றால் பல உயிர்கள் கொல்லப்பட்டிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
News November 3, 2025
‘இரவு 12 மணி’: மம்தாவை வறுத்தெடுத்த பாஜக

மே.வங்க வன்கொடுமை சம்பவத்தின் போது, இரவு 8 மணிக்கு மேல் மாணவிகளை வெளியே அனுமதிக்க கூடாது என்று மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து தெரிவித்த மம்தா பானர்ஜியை, பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. “யாரும் இரவில் வெளியே வரக்கூடாது என்று அறிவுறுத்தியிருந்தீர்கள். ஆனால், நம் வீராங்கனைகள் இரவு 12 மணி வரை விளையாடினார்களே!” என்று X-ல் பதிவிட்டுள்ளது.


