News May 11, 2024
டூவீலர்கள் மோதல்.. பழ வியாபாரி பலி

பாலக்கோட்டை சேர்ந்த பழ வியாபாரி அயூப்(55) என்பவர் தனது டூவீலரில் இன்று சாலையை கடக்க முயன்றார். அப்போது எதிரே பைக்கில் வந்த கொட்டா பள்ளம் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் மணிகண்டன் இவர் மீது மோதியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். பின்னர் இருவரையும் பாலக்கோடு ஜிஹெச்-சில் சேர்த்தனர். அங்கு அயூப் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பாலக்கோடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News April 20, 2025
தர்மபுரி மாவட்ட வட்டாட்சியர் எண்கள்

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் எண்களை தெரிஞ்சிக்கோங்க மக்களே! நல்லம்பள்ளி -9384094838, 04342-244456, காரிமங்கலம்-9384094839, 04348-242411, தர்மபுரி -9445000533, 04342-260927, பென்னாகரம்-9445000536, 04342-255636, அரூர் – 9445000534, 04346-222023, பாப்பிரெட்டிப்பட்டி -9445000535, 04346-246544, பாலக்கோடு – 9445000537, 04348-222045. *முக்கிய நம்பர்களான இவற்றை நண்பர்களுக்கும் பகிருங்கள்*
News April 20, 2025
தருமபுரி: கணவன்/மனைவி சண்டை நீங்க செல்ல வேண்டிய கோவில்

தருமபுரியில் கோவில் கொண்டிருக்கும் கல்யாண காமாட்சி அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள். தமிழகத்தில் சூலினிக்காக அமைக்கப்பட்ட ஒரே கோவில். வளர்பிறை அஷ்டமியில் இங்கு சிறப்பு பூஜை செய்தால், கணவன்-மனைவிக்குள் எப்பேர் பட்ட சண்டையாய் இருந்தாலும் தீர்ந்து ஒற்றுமையாய் இருப்பர் என்பது பக்தர்களிள் அசைக்க முடியாத நம்பிக்கை. உங்கள் கணவன்/மனைவி அடிக்கடி சண்டை போட்டால் இங்கு செல்லுங்கள். *நண்பர்களுக்கும் பகிரவும்*
News April 20, 2025
தருமபுரி: சிறுமி உட்பட 2 பெண்கள் மாயம்

தருமபுரி, அரூர் அடுத்த மோப்பிரிப்பட்டியை சேர்ந்தவர் வேதமாஸ்ரீ(23), பி.இ. படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். கடந்த 18 -ல் வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. இதேபோல், எச்.கோபிநாதம்பட்டியை சேர்ந்த 12 ஆம் வகுப்பு முடித்த 18 வயது சிறுமி 17 -ல் மாயமானர். அடுத்தடுத்து பெண்கள் மாயமான சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இது கடத்தலா வேறு காரணமா என்ற கோணத்தில் அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.