News April 14, 2025
டிராக்டர் மீது லாரி மோதி கோர விபத்து

விழுப்புரம் மாவட்டம் வி.சாலை கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவர் மயிலம் முருகன் கோவில் திருவிழாவுக்கு தன் உறவினர்களுடன் டிராக்டரில் சென்றார். சுவாமி தரிசனம் முடிந்து நேற்று காலை சொந்த ஊருக்கு புறப்பட்டனர். மயிலம் அருகே வந்த போது, வேகமாக வந்த லாரி, டிராக்டரின் பின்பக்கம் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பாஸ்கர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். 18 பேர் காயமடைந்தனர்.
Similar News
News September 22, 2025
விழுப்புரத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார். மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். ஒவ்வொரு மாதமும் திங்கட்கிழமை நடைபெறும் இந்த கூட்டத்தில், பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக அளித்து வருகின்றனர்.
News September 22, 2025
விழுப்புரம்: அச்சுறுத்தும் கஞ்சா – அதிரடி கைது

விழுப்புரம் மாவட்டம் வெள்ளிமேடு பேட்டை பகுதியில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்த 5 இளைஞர்களை போலீசார் இன்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5.5 கிலோ கஞ்சா, செல்போன் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
News September 22, 2025
விழுப்புரம்: பெண்கள் பாதுகாப்புக்கான எண்கள்

வீடு, அலுவலகம், பொது இடம் என அனைத்து இடங்களிலும் பெண்கள் & குழந்தைகளின் பாதுகாப்பு கேள்வி குறியே, எனவே, பெண் மீதான வன்கொடுமை-181, ராகிங்-155222, பெண்கள்&குழந்தைகள் மிஸ்ஸிங்-1094, குழந்தைகள் பாதுகாப்பு-1098, மனஉளைச்சல் -9911599100, தேசிய பெண்கள் ஆணையம்-01126944754, 26942369, தமிழ்நாடு பெண்கள் ஆணையம்-044 28592750 என்ற எண்களை சேவ் பண்ணுவது அவசியமானதாகும். தெரிந்த பெண்களுக்கு பகிரவும்.