News March 2, 2025

டிமிக்கி கொடுக்கும் அரசு ஊழியர்கள்! கணக்கெடுக்க உத்தரவு

image

புதுச்சேரி அரசின் அரசு துறைகளில் விடுமுறையில் சென்ற ஊழியர்கள் சிலர் பணிக்கு திரும்பாமல் உள்ளனர். இதனால் பிற அரசு ஊழியர்களுக்கு பணிசுமை அதிகரித்துள்ளதோடு, அரசு துறை பணிகளிலும் தேக்க நிலை ஏற்படுகிறது. இது தொடர்பாக தலைமை செயலர் சரத் சவுகானுக்கு புகார் சென்றதையடுத்து, அரசு துறையில் நீண்ட காலமாக பணிக்கு வராமல் இருக்கும் அரசு ஊழியர்களை கணக்கெடுத்து நடவடிக்கை எடுக்க உத்தரவு போடப்பட்டுள்ளது.

Similar News

News March 3, 2025

புதுவை போஸ்ட் ஆபிசில் வேலை : இன்றே கடைசி நாள்

image

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். புதுச்சேரியில் மட்டும் 63 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். SHARE பண்ணுங்க..

News March 3, 2025

தந்தை கண்டிப்பு: மகன் தற்கொலை போலீசார் விசாரணை

image

புதுவை, கோரிமேடு பகுதியை சேர்ந்த ரவி என்பவரது மகன் சேதுராமன், மூலகுளம் தனியார் கல்லூரியில் படிக்கிறார். நேற்று முன்தினம் சேதுராமன், கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இரவு 10:30 மணிக்கு மேல் போனில் பேசிக்கொண்டிருந்ததை ரவி கண்டித்தார். இதனால், மனமுடைந்த சேதுராமன், தனது அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News March 2, 2025

மின்சார நுகர்வோர் பேரணியில் பங்கேற்க புதுவை நிர்வாகிகள் டெல்லி பயணம்

image

அகில இந்திய மின்சார நுகர்வோர் சங்கம் சார்பில் மின்துறை தனியார் மையத்தை கண்டித்து புதுடெல்லியில் வரும் 4,5 தேதிகளில் பேரணி கருத்தரங்கம் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் பங்கேற்க புதுவை மின்சார நுகர்வோர் சங்க செயலாளர் சிவக்குமார் கமிட்டி உறுப்பினர் சண்முகம் ஆகியோர் இன்று ரயிலில் புது டெல்லி புறப்பட்டு சென்றனர். கருத்தரங்கில் புதுவை மாநில கோரிக்கைகள் குறித்து விவாதிக்க உள்ளனர்.

error: Content is protected !!