News March 30, 2025

டிப்ளமோ முடித்தால் போதும் மத்திய அரசு வேலை!

image

இந்திய அணுசக்தி கழகத்தில் (NPCIL) காலியாக உள்ள 391 காலி பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு டிப்ளமோ, ஐடிஐ முடித்திருந்தால் போதும். இதற்கு 18- 30 வயதுடையவர்கள் ஏப்ரல்- 1ஆம் தேதி மாலை 4 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.39,015 முதல் ரூ.68,697 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

Similar News

News January 25, 2026

செங்கை: சினிமா பாணியில் கடத்தல் சம்பவம்!

image

செங்குன்றம் மெக்கானிக் கடையில் 60 ஆயிரம் ரூபாய் திருடிவிட்டு தலைமறைவான சரவணனை, உரிமையாளர் அஸ்லாம் இன்ஸ்டாகிராமில் பெண் குரலில் பேசி வரவழைத்துள்ளார். ஆசையில் வந்த சரவணனை கார் கும்பல் கடத்தியபோது, போலீசார் சினிமா பாணியில் துரத்திச் சென்று மீட்டனர். கடத்தலில் ஈடுபட்ட அஸ்லாம் உட்பட 7 பேரை ஒட்டேரி போலீசார் கைது செய்து காரைப் பறிமுதல் செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

News January 25, 2026

செங்கை: பிஞ்சு உயிர் துடிதுடித்து பலி!

image

ஜமீன் பல்லாவரத்தைச் தஷீத் (7), தனியார் பள்ளியில் 2ஆம் வகுப்பு பயின்று வந்தான். கடந்த 2 நாட்களாக வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட சிறுவன், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று திடீரென மயங்கி விழுந்தான். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்தான். இச்சம்பவம் குறித்து பல்லாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 25, 2026

வேளச்சேரி – பரங்கிமலை ரயில் சேவை அடுத்த மாதம் துவக்கம்

image

பல ஆண்டுகளாகக் கிடப்பில் இருந்த வேளச்சேரி – பரங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் சேவை திட்டம், தற்போது நிறைவுப் பகுதியை எட்டியுள்ளது. இந்த நிலையில், இந்த ரயில் சேவை அடுத்த மாதம் முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொங்கலுக்கு பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில், சில நிர்வாகக் காரணங்களால் இவ்வழி தடத்தில் ரயில் சேவை தாமதமானது.

error: Content is protected !!