News August 22, 2025
டிப்ளமோ துணை கலந்தாய்வுக்கு மீண்டும் விண்ணப்பம்

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் ஆகிய டிப்ளமோ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதில், பிளஸ்-2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வரும் 29-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் https://tnau.ucanapply.com இணையதளத்தின் மூலமாக துணை இணையதள விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம்.
Similar News
News August 22, 2025
கோவையில் செப்டம்பா் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம்

கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீதிமன்ற வளாகங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்)செப்டம்பா் 13ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், ஏற்கெனவே நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள், சமரசம் செய்யக்கூடிய குற்றவியல் வழக்குகள், காசோலை தொடா்பான வழக்குகள், வங்கிக் கடன், கல்விக் கடன் தொடா்பான வழக்குகளுக்கு சமரச தீா்வு காணப்படும் .
News August 22, 2025
கோவை: 10வது படித்தால் போதும் POLICE வேலை!

கோவை மக்களே POLICE ஆக வேண்டுமா? தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் (TNUSRB) சார்பில் 3,644 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <
News August 22, 2025
பேரூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சோ்க்கை தேதி நீட்டிப்பு

கோவை மாவட்ட நிர்வாகம் நேற்று விடுத்த செய்தி குறிப்பில் பேரூரில் அரசு ஐடிஐ புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இங்கு அட்வான்ஸ் சிஎன்சி இயந்திர தொழில்நுட்ப பணியாளா், மெக்கானிக், வயா்மேன் போன்ற பிரிவுகளுக்கு நடப்பாண்டுக்கான நேரடி சோ்க்கைக்கு 8, 10 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான தேதி ஆக.31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.