News December 31, 2025
டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் பதவி உயர்வு

தமிழகம் முழுக்க 70 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏடிஜிபி ஆக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் பதவி உயர்வு பெற்று, ஆயுதப்படை டிஜிபி ஆக நியமிக்கப்பட்டுள்ளார். சந்தீப் மிட்டல் சைபர் கிரைம் டிஜிபி ஆகவும், பால நாகதேவி குற்றப்பிரிவு டிஜிபி ஆகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக மகேஷ் தயாள் பொறுப்பேற்கவுள்ளார்.
Similar News
News January 1, 2026
புத்தாண்டில் பிறந்த பீம் பாய்!

தாயின் 4 மணி நேர பிரசவ வலியின் முடிவில், பேரானந்தமாக குழந்தை ஒன்று பிறந்துள்ளது. விசாகப்பட்டினத்தில் ரூபாவதி (26) என்பவருக்கு சுமார் 4.8 கிலோ எடையுள்ள ஆண் குழந்தை சுகப்பிரசவமாக பிறந்துள்ளது. குழந்தையை கண்ட பலரும் ‘பீம் பாய் பொறந்துட்டான்’ என பூரித்து போயுள்ளனர். பொதுவாக சுகப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் 3.1 கிலோ வரை இருக்கும். புத்தாண்டில் இந்த உயிரின் வருகையை உறவினர்கள் கொண்டாடி வருகின்றனர்.
News January 1, 2026
ரேஷன் அட்டைதாரர்களுக்கு.. முதல் நாளே வந்த அறிவிப்பு

ஒவ்வொரு மாதமும் ‘தாயுமானவர்’ திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டு வைத்திருக்கும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. அந்த வகையில், இம்மாதம் ரேஷன் பொருள்கள் வீடு தேதி வரும் தேதி வெளியாகியுள்ளது. ஆம்! ஜன.4, 5-ல் ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. இதை முதல் மாவட்டமாக திருவள்ளூர் ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News January 1, 2026
முட்டைகோஸால் மரணமா?

உபி.,யில் தீராத தலைவலியால் அவதியுற்று வந்த 12-ம் வகுப்பு மாணவி உயிரிழந்துள்ளார். அவருக்கு MRI ஸ்கேன் பரிசோதனையில் மூளையில் 8 கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு ஆபரேஷன் செய்தபோது பலியாகியுள்ளார். இதுகுறித்து சிகிச்சை அளித்த டாக்டர்கள், மாணவி சாப்பிட்ட உணவு வழியே முட்டைக்கோஸில் காணப்படும் ஒருவகையான ஒட்டுண்ணி மூளைக்குள் நுழைந்து, இந்த கட்டிகள் ஏற்பட்டிருக்கலாம் என்று விளக்கமளித்துள்ளனர்.


