News December 17, 2025

டிசம்பர் 19 விவசாயக் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!

image

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டம் வருகின்ற 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை பத்தரை மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் விவசாயிகள் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று விவசாயம் தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 19, 2025

BIG BREAKING: சேலத்தில் 3,62,439 வாக்காளர்கள் நீக்கம்!

image

SIR பணிகளைத் தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியலை சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி இன்று வெளியிட்டுள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தம் 3,62,439 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதில் இறந்தவர்கள் -1,00,974, குடியிருப்பில் இல்லாதவர்கள் , முகவரி மாற்றம் உள்ளிட்ட இதரர் – 2,41,284 , இரட்டை பதிவு – 20,171 என மொத்தம் 3,62,439 வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

News December 19, 2025

சேலம்: இலவச தையல் மிஷின் வேண்டுமா?

image

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்!

News December 19, 2025

ஆத்தூரில் இரும்பு ராடு திருடிய இரண்டு பேர் கைது!

image

ஆத்தூர் புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை (70). இவர் கட்டிடம் கட்ட இரும்பு ராடு, ஜன்னல் உள்ளிட்ட பொருட்கள் வாங்கி வைத்திருந்தார். அதில் 5 ராடுகள் திருட்டு போனது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது இருவர் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் ஆத்தூர் ஊரக போலீசார் விசாரித்து, பிரபாகரன் (36). ராஜக்கலை (41). உள்ளிட்ட இருவரை நேற்று கைது செய்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!