News November 4, 2025
டிசம்பர் 1-ம் தேதி முதல் விலை உயருகிறது?

வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல், வாடிக்கையாளர்களுக்கு Jio, Airtel, VI
நெட்வொர்க்குகள் அதிர்ச்சி தரவுள்ளன. ஆம், ரீசார்ஜ் கட்டணங்களை 10- 12 % வரை இந்நிறுவனங்கள் உயர்த்தவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதுவரை, ₹199 ரீசார்ஜ் பிளான், இனி ₹222 ஆகவும், ₹899 ஆக ரீசார்ஜ் பிளான், இனி ₹1006 ஆக உயர்த்தப்படும் எனவும் கூறப்படுகிறது. நீங்க மாதம் எவ்வளவுக்கு ரீசார்ஜ் பண்றீங்க?
Similar News
News November 4, 2025
உங்கள் குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிக்க… PHOTOS

தற்காலத்தில் சிறுவர்கள் எப்போதும் போனுடனே இருக்கின்றனர். இதனால் அவர்களின் கவனக்குவிப்பு திறனும் நினைவாற்றலும் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில், உங்கள் குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்க உதவும் உணவுகளை மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. உங்களுக்கு தெரிந்த ஐடியாவையும் கமெண்ட் பண்ணுங்க!
News November 4, 2025
தமிழகத்தை கலவர பூமியாக்கும் அன்புமணி: ராமதாஸ்

பாமக MLA <<18196872>>அருள்<<>> மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ராமதாஸ், நடைபயணம் என்ற பெயரில் தன்னுடன் உள்ள பாமகவினரை ஒழிக்க அன்புமணி திட்டமிட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார். தாக்குதலில் ஈடுபட்டவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரியுள்ள அவர், அன்புமணியின் நடைபயணத்தால் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என கூறியுள்ளார். அன்புமணியின் கும்பலை தடை செய்யவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
News November 4, 2025
இரவில் மழை பொளந்து கட்டும்.. வந்தது அலர்ட்

சென்னையில் இன்று மாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. மேலும், பல இடங்களில் கனமழை பெய்துவரும் நிலையில், இரவிலும் மழை தொடரும் என IMD கணித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கை, காஞ்சி, திருவள்ளூர், நாகை, வேலூர், கோவை ஆகிய மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கவனமாய் இருங்கள் நண்பர்களே!


