News April 6, 2025

டிகிரி முடித்தவர்களுக்கு வங்கியில் வேலை

image

திருச்சியில் இயங்கி வரும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் GENERAL MANAGER பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி துறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ரூ.15,000-ரூ.25,000 வரை ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் <>இங்கே க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு SHARE செய்து உதவுங்கள்…

Similar News

News April 7, 2025

வகுப்பறையில் பெண்ணுடன் தங்கியிருந்த இளைஞர் கைது

image

லால்​குடி அருகே வாளாடி மேல்​நிலைப் பள்​ளி வகுப்​பறை ஒன்​றில் நேற்றுமுன்​ தினம் ஆண், பெண் என 2 பேர் உறங்​கிக் கொண்​டிருந்​தனர். ஆசிரியர்​கள் கண்​டித்​த​போது, அந்த இளைஞர் அவர்​களு​டன் வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​டார். இதுதொடர்பான வீடியோ சமூக வலை​தளங்​களில் பரவியது. இந்நிலையில் லால்​குடி போலீ​சார் வழக்​குப் பதிவு செய்​து, வகுப்​பறை​யில் இருந்த கீழ​வாளாடியைச் சேர்ந்த நவீன்​கு​மாரை (28) கைது செய்​தனர்.

News April 6, 2025

சமயபுரம் மாரியம்மன் கோயில் யானைக்கு நினைவு மண்டபம்

image

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமாக சுபத்ரா யானை இருந்தது. திருவிழா காலங்களில் இந்த யானை பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக யானை இறந்து விட்டது. சட்டமன்ற அறிவிப்பின்படி கோயில் நிர்வாகம் யானைக்கு சுமார் ரூ.49.50 லட்சத்தில் நினைவு மண்டபம் கட்டப்படுகிறது. இதனை அறங்காவலர் குழுத்தலைவர் வி.எஸ்.பி.இளங்கோவன், கோயில் இணை ஆணையர் பிரகாஷ் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

News April 6, 2025

அங்கன்வாடி பணியாளர்: விண்ணப்பிக்க அழைப்பு

image

திருச்சி மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 17 அங்கன்வாடி பணியாளர், 17 குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் 262 அங்கவாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. எனவே இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார். வேலை தேடும் உங்க நண்பருக்கு பகிரவும்… SHARE NOW!

error: Content is protected !!