News April 5, 2024

டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை

image

தமிழகத்தில் ஏப்.19 அன்று நாடளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் வாக்குபதிவை முன்னிட்டு ஏப்.17 முதல் ஏப்.19 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. மேலும், வாக்கு எண்ணிக்கை நாளான ஜீன்.4 ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 3, 2026

கரூர்: G Pay / PhonePe / Paytm பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

கரூர் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News February 3, 2026

கரூரில் நிகழ்ந்த மர்ம மரணம்!

image

கரூர் வெங்கமேடு கொங்கு நகரைச் சேர்ந்த பாலகுரு (56), செம்மடை பிரிண்டிங் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வந்தார். நேற்று நிறுவனத்தின் அறையில் சுயநினைவின்றி இருந்த அவரை மீட்டு GHக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து அவரது சகோதரர் ராமநாதன் அளித்த புகாரின் பேரில், வாங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 3, 2026

கரூரில் வசமாக சிக்கிய பெண்: அதிரடி கைது!

image

வேலாயுதம்பாளையம் எஸ்.ஐ கண்ணன் உள்ளிட்ட போலீசார் நேற்று முன்தினம், பெரிய ரங்கப்பாளையம் பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த பகுதியில் உள்ள வீட்டில், மதுபாட்டில்களை விற்றதாக திருமூர்த்தி என்பவரது மனைவி வசந்தா, 67; என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து, 145 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!