News February 27, 2025
டாஸ்மாக் ஊழியரிடம் பணம் பறித்த நபர் கைது

திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் டாஸ்மாக்கில் பணிபுரிகிறார். இவர் நேற்று (பிப்.26) பாலக்கரை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, இவரிடம் குணசேகரன் என்பவர் வழிமறித்து கத்தி முனையில் ரூ. 2000 பணத்தை பறித்து கொண்டு சென்றார். இதுகுறித்து ரவிச்சந்திரன் பாலக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் குணசேகரனை கைது செய்து பணம், கத்தியை பறிமுதல் செய்தனர்.
Similar News
News August 15, 2025
திருச்சி: கடன் தொல்லை நீங்க வேண்டுமா?

திருச்சி அருகே வயலூர் முருகன் கோயில் அமைந்துள்ளது. இங்கு தெய்வானை, வள்ளி ஆகிய இருவருடனும் ஆதி நாதரையும் ஆதி நாதியையும் முருகப் பெருமான் பூசிப்பது வயலூரின் தனிச் சிறப்பாகும். மேலும் அருணகிரிநாதர் பாடிய தலமாகவும், திருமுருக கிருபானந்த வாரியார் போற்றிய தலமாகவும் இது விளங்குகிறது. இக்கோயிலில் முருகனை வழிபட்டால் கடன் தொல்லை, திருமண தடை உள்ளிட்டவை தீரும் என்பது நம்பிக்கை. பக்தர்களுக்கு SHARE பண்ணுங்க.
News August 15, 2025
திருச்சி: ரூ. 45,000 சம்பளத்தில் கிராம வளர்ச்சி வங்கி வேலை!

திருச்சி: Engineering படித்தவர்களுக்கு தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியின் (NABARD) தமிழ்நாட்டில் Supervisors உள்ளிட்ட 63 பணியிடங்கள் நிரப்படவவுள்ளது. மாத சம்பளமாக Rs.45,000 வழங்கப்படும். கல்வி தகுதி B.E / B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 35 வயதிற்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்<
News August 15, 2025
தங்க பதக்கம் வென்ற திருச்சி மாவட்ட காவலருக்கு பாராட்டு

தமிழ்நாடு காவல்துறையினருக்கு மாநில அளவிலான திறனாய்வு போட்டி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் அனைத்து மாவட்டத்தில் இருந்தும் ஏராளமான காவலர்கள் கலந்துகொண்டனர். அப்போது ‘Scientific aids in investigation’ பிரிவில் நடைபெற்ற போட்டியில், கல்லக்குடி காவல்நிலைய தனிப்பிரிவு காவலர் விஜயகுமார் தங்க பதக்கம் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு டி.ஜி.பி சங்கர் ஜிவால் பதக்கம்(ம)சான்றிதழை வழங்கினார்.