News January 30, 2025

டவுன் உதவி காவல் ஆணையர் நியமனம்

image

தமிழகத்தில் 16 டிஎஸ்பிக்கள் இடம் மாற்றம் செய்தும் 83 இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு வழங்கியும் டிஜிபி இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த வகையில் திருநெல்வேலி டவுன் காவல் உதவி ஆணையர் செந்தில்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பணகுடி இன்ஸ்பெக்டராக பணி புரிந்த அஜி குமார் உதவி ஆணையராக பதவி உயர்வு பெற்று திருநெல்வேலி டவுன் உதவி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Similar News

News August 22, 2025

நெல்லை: ரூ.1,31,500 சம்பளத்தில் வேலை APPLY NOW

image

நெல்லை மக்களே, தமிழக நீதிமன்றங்களில் ASSISTANT PROGRAMMER பணியிடங்களுக்கு 41 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கம்ப்யூட்டர் துறையில் டிகிரி முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். வரும் செப்.9க்குள் உயர்நீதிமன்ற இணையதள பக்கத்தில் <>லிங்க்<<>> விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ரூ.35,900 – ரூ.1,31,500 சம்பளத்தில் பணியமர்த்தப்படுவர். SHARE IT.

News August 22, 2025

நெல்லையப்பர் ஆவணி மூலத் திருவிழா தொடக்கம்

image

நெல்லை டவுன், நெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா
நாளை காலை 6 மணிக்கு சுவாமி சன்னதியில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இது கருவூர் சித்தர் சாபம் கொடுத்தது, பின்னர் அவருக்கு காட்சி கொடுத்து சுவாமி சாபவிமோசனம் பெற்ற வரலாற்று தொடர்புடைய திருவிழா ஆகும். அந்த நிகழ்ச்சி பத்தாம் திருநாளான செப்.1ம் தேதி அன்று மானூரில் அதிகாலை நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அலுவலர் செய்து வருகிறார்.

News August 22, 2025

பள்ளிக்கு கத்தியை கொண்டு சென்ற மாணவரால் பரபரப்பு

image

திசையன்விளை அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு மாணவன் புத்தகப்பையில் கத்தி மறைத்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மற்றொரு மாணவனின் மிரட்டலால் பயந்து முன்னெச்சரிக்கையாக கத்தி வைத்திருந்ததாக விசாரணையில் தெரியவந்தது. ஆசிரியர் மூலம் தகவல் அறிந்த தலைமை ஆசிரியர் போலீசுக்கு தெரிவித்தார். போலீசார் மாணவனிடம் இருந்து கத்தியை பறிமுதல் செய்து எச்சரித்து விடுவித்தனர்.

error: Content is protected !!