News February 22, 2026

ஞாயிறு அன்று இதை செய்தால் தீராத கடனும் தீரும்

image

இரவு 8 – 11.30 மணிக்குள் எந்த நேரத்திலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். 4 மிளகை எடுத்துக்கொண்டு, நிலை வாசலுக்கு வெளியே வாருங்கள். குலதெய்வத்தை மனதார வேண்டி கையில் இருக்கும் மிளகை தலைக்கு இடது புறமாக 3 முறை மட்டும் சுற்றுங்கள். அதன் பிறகு, 4 மிளகையும் 4 திசைகளில் கண்ணுக்கு தெரியாமல் தூர எறிந்து விடுங்கள். அவ்வளவுதான். இதை 3 வாரம் தொடர்ந்து செய்தால், கஷ்டம் நீங்கும் என்பது ஐதீகம்!

Similar News

News March 3, 2026

தங்கம் வைத்திருப்போருக்கு எச்சரிக்கை

image

வருமான வரி விதிகளின்படி, வீட்டில் குறிப்பிட்ட அளவு நகைகளை மட்டுமே வைத்திருக்க முடியும். *திருமணமான பெண் – 500 கிராம். *திருமணமாகாத பெண் – 250 கிராம். ஆண்கள்( திருமணமானவர்கள்/ திருமணமாகாதவர்கள்) – 100 கிராம். இந்த வரம்பிற்கு மேல் நீங்கள் தங்க நகைகளை வைத்திருந்தால், வருமான வரி சோதனையின்போது ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம். அப்படி இல்லையெனில் நகைகள் பறிமுதல் செய்யப்படும். SHARE IT

News March 3, 2026

BREAKING: விஜய் அறிவித்தார்

image

நாளை தஞ்சையில் நடக்கும் தவெகவின் நிர்வாகிகள் கூட்டத்திற்கு QR அனுமதி சீட்டு பெற்றவர்கள்(4,900 பேர்) மட்டுமே வரவேண்டும் என விஜய் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கர்ப்பிணிப் பெண்கள், பள்ளி மாணவர்கள் கூட்டத்திற்கு வரவேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல், கூட்டம் நடைபெறும் இடத்தில் மேற்கூரை அமைக்கப்பட்டு, நிர்வாகிகளுக்கு தண்ணீர், மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

News March 3, 2026

அபிஷேக்… உங்கள் திறமை எங்கும் போகாது: பாண்டிங்

image

நடப்பு டி20 WC-ல் 6 போட்டிகளில் விளையாடி 3 டக் அவுட் உள்பட வெறும் 80 ரன்கள் மட்டுமே எடுத்து அபிஷேக் சர்மா தடுமாறி வருகிறார். இந்நிலையில், சில நேரங்களில் ஒரு சிறிய சரிவை சந்திக்கும்போது, ​​தினமும் ஒன்றரை மணி நேரம் வலைபயிற்சியில் ஈடுபடுவது எப்போதும் சிறந்ததல்ல என்றும், மனதளவில் புத்துணர்ச்சியுடன் இருப்பது அவசியம்; உங்கள் திறமைகள் எங்கும் செல்லாது எனவும் அபிஷேக்கிற்கு பாண்டிங் அறிவுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!