News October 27, 2024

ஞாயிறு அன்றும் ரேஷன் கடைகள் இயங்கும்: அமைச்சர்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை (அக்.27) ரேஷன் கடைகள் வழக்கம் போல் இயங்கும் என்று அமைச்சர் பெரிய கருப்பன் அறிவித்துள்ளார். எனவே, பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் விடுமுறை இல்லை என்பதை நினைவில் கொண்டு, நியாய விலைப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். பண்டிகை கூட்ட நெரிசலை குறைப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

Similar News

News August 10, 2025

மதுராந்தகம் அருகே போலி மருத்துவர் கைது

image

மதுராந்தகம் அருகே மேலவளம்பேட்டையில் மருத்துவம் படிக்காமல் பிரகாஷ் என்பவர் மருத்துவராகப் பணியாற்றுவதாகக் கிடைத்த புகாரைத் தொடர்ந்து, மருத்துவப் பணிகள் இயக்குநர் மலர்விழி, மதுராந்தகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பிரகாஷின் ஆவணங்களை ஆய்வு செய்ததில், அவை போலியானவை எனத் தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் பிரகாஷைக் கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

News August 9, 2025

செங்கல்பட்டு: IT வேலை வேண்டுமா? சூப்பர் வாய்ப்பு

image

செங்கல்பட்டு இளைஞர்களே, ஐடி துறையில் இளைஞர்களுக்கு எளிதில் வேலை கிடைக்கும் விதமாக, தமிழக அரசு இலவச பயிற்சிகளை வழங்கி வருகிறது. இதில் JAVA, C++, J2EE, Web Designing, Coding, Testing என பல்வேறு Courseகள் உள்ளன. இதற்கான வகுப்புகள் சென்னையில் நடைபெறுகிறது. இங்கே <>கிளிக் <<>>செய்து கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். நல்ல சம்பளத்தில் உடனே IT வேலைக்கு போக அருமையான வாய்ப்பு. நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News August 9, 2025

செங்கல்பட்டு மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை திறப்பு

image

செங்கல்பட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தாம்பரம் சானடோரியம் பகுதியில் ரூ.145.41 கோடி செலவில் 400 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய மருத்துவமனையை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். தொடர்ந்து, மருத்துவமனையின் உள் கட்டமைப்புகளை அவர் ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

error: Content is protected !!