News November 16, 2025
ஜோலார்பேட்டை அருகே வாலிபர் தற்கொலை முயற்சி

ஜோலார்பேட்டை அடுத்த ஒட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பார்த்தீபன் இவர் குடும்பம் பிரச்சினை காரணமாக இன்று (நவ.15) தனது வீட்டின் அருகே உள்ள ரேஷன் கடை அருகில் எலி பேஸ்ட் சாப்பிட்டு மயங்கி விழுந்தார். இதனால் அங்கிருந்தவர்கள் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து ஜோலார்பேட்டை போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News November 16, 2025
திருப்பத்தூர்: Certificate இல்லையா? கவலை வேண்டாம்!

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது E-பெட்டகம் என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யாலாம்.
News November 16, 2025
வயிற்று வலியால் இளம்பெண் தற்கொலை முயற்சி

ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட லட்சுமி நகர் சேர்ந்தவர் பூவரசன் இவரது மனைவி செல்வி இவருக்கு அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தவர். இன்று (நவ.15) மீண்டும் வயிற்றுப் வலி ஏற்பட்டு வலி தாங்க முடியாமல் வீட்டில் இருந்த எலி பவுடர் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
News November 16, 2025
ஜோலார்பேட்டை அருகே 4 மாதம் கர்ப்பிணி தாக்கிய கணவன்

ஜோலார்பேட்டை அடுத்த பால்னாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வா இவரது மனைவி வளர்மதி என்பவர் 4 மாதம் கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் இன்று (நவ.15) கணவர் விஸ்வா தனது மனைவியிடம் குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கணவர் தனது மனைவியை தாக்கியுள்ளார். இதனால் படுகாயம் அடைந்த வளர்மதி சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


