News January 2, 2026
ஜோதிமணியின் பதிவு அதிர்ச்சியளிக்கிறது: SP

அழிவின் பாதையில் தமிழ்நாடு காங்கிரஸ் செல்வதாக <<18740431>>ஜோதிமணி<<>> SM-ல் பதிவிட்டது அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் வளர்ச்சிக்கு அனைவரும் உழைக்கும்போது, அவர் ஏன் இவ்வாறு கூறினார் என்று தெரியவில்லை என செல்வப் பெருந்தகை(SP) தெரிவித்துள்ளார். ஜோதிமணி மாவட்டத்தில்(கரூர்) உட்கட்சி பிரச்னை இருப்பது உண்மையே, தான் அதை தீர்த்து வைத்துள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
Similar News
News February 3, 2026
பிரபல தமிழ் பாடகியின் பரிதாப நிலை

‘ஈசன்’-ல் இடம்பெற்ற ஜில்லா விட்டு ஜில்லா பாடல் மூலம் பிரபலமானவர் தஞ்சை செல்வி. 2 ஆண்டுகளுக்கு முன் இவருக்கு முடக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சொல்லில் அடங்கா துயரங்களை சந்தித்து மீண்டு வந்திருந்தாலும், தற்போது வாய்ப்புகள் இன்றி தவிப்பதாக வேதனை தெரிவித்துள்ளார். வீட்டு வாடகை கூட கட்டமுடியாமல் சிரமப்படுவதாக கூறும் அவர், சிறு கட்சேரி வாய்ப்புகள் கிடைத்தால் பிழைப்பு நடத்திக் கொள்வேன் என உதவி கேட்டுள்ளார்.
News February 3, 2026
அரசு ஊழியர்களின் சம்பளம் கட்.. ஏன் தெரியுமா?

உ.பி.,யில் சொத்து விவரங்களை தாக்கல் செய்யாத 68,000-க்கும் அதிகமான அரசு ஊழியர்களின் சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. லஞ்சம் வாங்கி சொத்துகளை சேர்க்கும் ஊழியர்களை கண்டறியும் விதமாக அம்மாநில அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த செய்தியை SM-ல் பதிவிட்டு, தமிழ்நாட்டிலும் இதுபோன்று நடவடிக்கை எடுத்தால் எப்படி இருக்கும் என நெட்டிசன்கள் பதிவிடுகின்றனர். இதுகுறித்து உங்கள் கருத்து?
News February 3, 2026
கவிஞர் கண்ணதாசன் பொன்மொழிகள்!

*எங்கே வாழ்க்கை தொடங்கும்? அது எங்கே எவ்விதம் முடியும்? இதுதான் பாதை, இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது *நல்லவன் படகில் போகும் போது துடுப்பு தண்ணீருக்குள் மூழ்கினால், நதியேத் திசை மாறி அவன் சேர வேண்டிய இடத்தில் கொண்டு போய்ச் சேர்த்துவிடும் *ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம். அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம் *துன்பங்களை வளர்ப்பதும் தனிமைதான். தணிப்பதும் தனிமைதான்.


