News November 4, 2025
ஜெ. முதல் OPS வரை! கடைசியில் திமுகவிற்கு பெரிய யூடர்ன்

ஜெ., இருக்கும்போதே சக்திவாய்ந்த அரசியல் தலைவராக வலம்வந்த மனோஜ் பாண்டியன், பல்வேறு பொறுப்புகளை வகித்தார். ஜெ., மறைவுக்கு பின் சசிகலா பொதுச் செயலாளராக வரவேண்டும் என போர்க்கொடி தூக்கியதில் இவரும் ஒருவர். பின்னர் OPS பக்கம் சாய்ந்தார். EPS-க்கு எதிரான இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் OPS தரப்பில் இவர்தான் ஆஜரானார். இந்நிலையில், மனோஜ் பாண்டியன் திமுகவில் ஐக்கியமாகியுள்ளார்.
Similar News
News November 4, 2025
WC-யில் தோற்றாலும் முதலிடம் பிடித்த SA கேப்டன்

மகளிர் உலகக்கோப்பை தொடர் முழுவதும், ICC ODI தரவரிசையில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா முதலிடத்தில் இருந்தார். ஆனால், ஃபைனலில் இந்தியாவிடம் தோற்ற SA அணி கேப்டன் லாரா வோல்வார்ட், அவரை தற்போது பின்னுக்கு தள்ளியுள்ளார். செமி ஃபைனல், ஃபைனல் என 2 போட்டிகளிலும் சதம் விளாசி அவர் முதலிடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் முதல்முறையாக டாப் 10-க்குள் (10-வது இடம்) இடம்பிடித்துள்ளார்.
News November 4, 2025
திமுகவில் அடுத்தடுத்து இணையும் அதிமுக புள்ளிகள்

மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ், அன்வர் ராஜா, கார்த்திக் தொண்டைமான் என அதிமுகவில் இருந்த முக்கிய புள்ளிகள் அடுத்தடுத்து திமுகவில் இணைந்து வருகின்றனர். சொந்த ஊரில் மிகவும் செல்வாக்கு பெற்ற இவர்களின் வருகை திமுகவுக்கு பலம் சேர்க்கும் என்பது உண்மைதான். அதே நேரம், புதிதாக இணையும் மாற்றுக் கட்சியினருக்கு தேர்தலில் வாய்ப்பு கொடுக்கப்பட்டால், திமுகவினர் அதிருப்தி அடையவும் வாய்ப்புண்டு. உங்க கருத்து?
News November 4, 2025
₹1,000 மகளிர் உரிமைத் தொகை… வந்தாச்சு அப்டேட்

ஜூலை 15 முதல் தற்போது வரை 30 லட்சத்திற்கும் அதிகமானோர் மகளிர் உரிமைத் தொகை கோரி விண்ணப்பித்துள்ளனர். புதிய பயனர்களுக்கு டிச.15-ல் ₹1,000 வரவு வைக்கப்படும் என உதயநிதி அறிவித்திருந்தார். ஆனால், திட்டத்திற்கு தகுதியானவர்கள் குறித்த அறிவிப்பு இன்னமும் வெளியாகாததால் பலரும் கலக்கத்தில் இருந்தனர். இந்நிலையில், தகுதியானோர் விவரம் நவ.30-க்குள் தெரிவிக்கப்படும் என உதயநிதி மீண்டும் உறுதியளித்துள்ளார்.


