News December 23, 2025
ஜெயிலர் 2 படத்தில் கேமியோ சற்று அதிகம்: சிவராஜ்குமார்

‘ஜெயிலர் 2’ படத்தில் தான் நடிப்பதை சிவராஜ்குமார் உறுதி செய்துள்ளார். ஒரு நாள் ஷூட்டிங்கில் கலந்துகொண்டதாகவும், ஜனவரிக்குள் தனது பகுதி முடிவடையும் என்றும் அப்டேட் கொடுத்துள்ளார். முந்தைய பாகத்தின் தொடர்ச்சியாகவே இப்படம் உருவாகி வருவதாகவும், இதில் தனது ரோலின் நீளம் சற்று அதிகமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். டிஸ்யூ சம்பவக்காரனாக சிவராஜ்குமாரை பார்க்க ரெடியா?
Similar News
News December 30, 2025
துருக்கியில் மோதல்: 9 பேர் பலி!

துருக்கி, இஸ்தான்புல் அருகே யலோவா பகுதியில், புத்தாண்டு நேரத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த ISIS பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டை, போலீசார் சுற்றி வளைத்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், 3 போலீசார் அதிகாரிகளும் உயிரிழந்தனர். 8 போலீசார் படுகாயமடைந்தனர். துருக்கியில் நடத்தப்பட்ட சோதனைகளில் இதுவரை 115 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
News December 30, 2025
நடிகை நந்தினி தற்கொலை.. பரபரப்பு தகவல்

கௌரி சீரியல் நடிகை நந்தினி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சின்னத்திரை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பெங்களூருவில் தங்கியிருந்த அவர் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இறப்பதற்கு முன் அவர் கைப்பட எழுதிய கடிதத்தை போலீஸ் கைப்பற்றியுள்ளது. அதில் திருமணத்திற்கு பெற்றோர் வற்புறுத்தியதால், மன ரீதியாக பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்கள் விரைவில் தெரியவரும்.
News December 30, 2025
பல்கலை., மசோதாவை திருப்பி அனுப்பினார் ஜனாதிபதி

சென்னை பல்கலை., துணை வேந்தரை நீக்கவும், நியமிக்கவும் அரசுக்கு அதிகாரம் அளிக்கும் சட்டத்திருத்த மசோதா 2022-ல் நிறைவேற்றப்பட்டது. கவர்னர் ரவி அதனைத் திருப்பி அனுப்பிய நிலையில், மீண்டும் மசோதா நிறைவேற்றப்பட்டு அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 2023-ல் கவர்னர் அதை ஜனாதிபதியின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்தார். மசோதாவை 2 ஆண்டுகளாக நிலுவையில் வைத்திருந்த முர்மு, தற்போது TN அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார்.


