News January 23, 2026

ஜெயலலிதா குறித்து PM மோடி சொன்ன வார்த்தை!

image

TN-ல் தற்போது பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் அதனை அரசு தடுக்க தவறிவிட்டதாகவும் PM மோடி சாடியுள்ளார். மதுராந்தகத்தில் நடைபெற்ற NDA பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ஜெயலலிதாவின் ஆட்சியில் குற்றங்கள் கட்டுக்குள் இருந்ததாகவும், அவர் தைரியமாக நடவடிக்கை எடுத்ததாகவும் கூறினார். மேலும், போதைப்பொருள் மாஃபியா கும்பலிடம் மாணவர்களை திமுக ஒப்படைத்துவிட்டதாகவும் விமர்சித்தார்.

Similar News

News February 1, 2026

ரசிகர்களை மட்டுமே விஜய் நம்பவில்லை: அருண்ராஜ்

image

ஊழல் சக்தியுடன் விஜய் கூட்டணி அமைக்காமல் இருப்பதைத்தான் மக்கள் விரும்புகிறார்கள் என அருண்ராஜ் தெரிவித்துள்ளார். விஜய் வெறும் ரசிகர்களை மட்டும் நம்பி அரசியலுக்கு வரவில்லை என்றும் மக்களின் பேராதரவுடன்தான் களத்திற்கு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆட்சியில் பங்கு என்பது கட்சியின் கொள்கை முடிவு என்றும், கூட்டணி கட்சிகள் வரும் என்ற நம்பிக்கையில் விஜய் கட்சி ஆரம்பிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

News February 1, 2026

இந்திய ரூபாய் தாளின் ரகசியம் தெரியுமா?

image

இன்றைய தினம், மத்திய பட்ஜெட் மீதுதான் பலரின் கவனம் இருக்கும். இந்நிலையில், ரூபாய் நோட்டு குறித்த தகவல் ஒன்றை அறிவோம். ரூபாய் நோட்டு காகிதத்தால் ஆனது கிடையாது. லினன் & பருத்தியால் தான் இவை தயாரிக்கப்படுகின்றன. 75% பருத்தி, 25% லினன் என்ற காம்போவில் உருவாக்கப்பட்டு, அவை ஜெலட்டின் பிசின் கரைசலுடன் கலக்கப்படுகின்றன. இதன் காரணமாகவே ரூபாய் நோட்டுகள் நீண்ட காலம் கிழியாமல் இருக்கின்றன. SHARE IT.

News February 1, 2026

தமிழை காக்கும் மோடி; அழிக்கும் ஸ்டாலின்: தமிழிசை

image

தமிழ் கலாச்சாரம் அழிய சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வழிவகுத்ததாக திருமாவளவன் கூறிய கருத்துக்கு தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார். PM மோடி இந்தியா முழுவதும் தமிழ் கற்க வேண்டும் என கூறும் நிலையில், தமிழ்நாட்டை சேர்ந்த CM ஸ்டாலின், திருமாவளவன் ஆகியோர் தமிழின் பெருமையை இழக்க செய்கிறார்கள் என குற்றம்சாட்டினார். <<19017609>>டிடிவி தினகரன் <<>>உள்ளிட்டோரும் திருமாவளவனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!