News September 12, 2025
ஜெயங்கொண்டம்: அரசு திட்டப் பணிகள் குறித்து ஆலோசனை

ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், நேற்று (செப்.11) மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு (DISHA) சார்பில், மத்திய அரசின் திட்டப் பணிகள் குறித்தும், குழுவினை மேம்படுத்துவது குறித்தும், சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணனிடம், மத்திய அரசின் சார்பில், வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு துணை இயக்குநர் இந்திரகுமார் கேட்டறிந்தார்.
Similar News
News September 12, 2025
பெரம்பலூர்: போலீசுக்கு கொலை மிரட்டல்

வெங்கனூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் நேற்று இரவு ரோந்து பணியில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தார். அப்போது புள்ளம்பாடியைச் சேர்ந்த நவீன் மற்றும் இலந்தைக்கூடம் பகுதியைச் சேர்ந்த லோகேஷ் ஆகிய இருவரையும் சோதனை செய்தார். மதுபோதையில் இருந்த அவர்கள் ஆய்வாளரிடம் வாக்குவாதம் செய்து தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்த நிலையில், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தார்.
News September 12, 2025
அரியலூர்: சொந்தவீடு கட்ட போறீங்களா?

அரியலூர் மக்களே வீடு கட்ட ஆகும் செலவை விட வீட்டு கட்ட கட்டிட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க பல ஆயிரம் செலவு ஆகும். அந்த செலவை எளிதாக்க ஒரு வழி இருக்கு. PMYURBAN மூலமாக வீடு மனை இலவச கட்டிட வரை பட அனுமதி பெறலாம். <
News September 12, 2025
அரியலூரில் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் திமுக கூட்டம்

அரியலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் திமுக நிர்வாகிகள் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது. இதில், முதலமைச்சர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் திருவுருவப் படத்தை திறந்து வைத்து உரையாற்றியதற்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. செப்.15 அண்ணா பிறந்தநாள் உறுதிமொழி நிகழ்ச்சி, உறுப்பினர் சேர்க்கைக்கு நன்றி தெரிவிப்பு பொதுக்கூட்டம் உள்ளிட்ட திமுக பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.