News April 13, 2025
ஜெயங்கொண்டம்: அஞ்சலி செலுத்திய எம்எல்ஏ

ஜெயங்கொண்டம் அருகே பிராஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் ந.சுகுமார் இயற்கை ஏய்தினார். அடைந்ததையடுத்து, நேற்று (ஏப்ரல்-12) ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் நேரில் சென்று சுகுமாரின் உடலுக்கு மலரஞ்சலி செலுத்தினார். அவருடன் ஒன்றிய திமுக கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
Similar News
News November 11, 2025
சிலிண்டர் லாரி விபத்து-ஆட்சியர், எஸ்.பி நேரில் ஆய்வு

அரியலூர் மாவட்டம் வாரணவாசி அருகே கேஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து தீ விபத்து நடந்தது. அந்த இடத்தில் அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி மற்றும் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ் பா சாஸ்திரி ஆகியோர் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். சுமார் அரை கிலோ மீட்டர் சுற்றளவிற்கு பேரிகார்டுகள் அமைத்து பொதுமக்கள் யாரும் செல்லாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
News November 11, 2025
அரியலூர்: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா ?

அரியலூர் மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே <
News November 11, 2025
அரியலூரில் போக்குவரத்து தடை!

அரியலூர் அருகே சிலிண்டர் வெடி விபத்து காரணமாக அரியலூர் To கீழப்பழூர் வழியாக திருச்சி, தஞ்சை மாவட்டத்திற்கு செல்லும் அனைத்து போக்குவரத்துக்கும் தடை செய்யப்பட்டு, மாற்று வழியில் செல்ல அதிகாரிகள் அறிவுரை வழங்கியுள்ளனர். இதுமட்டும் அல்லாது கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள், பள்ளி செல்லும் வாகனங்கள் அனைத்தும் மாற்று வழியில் செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


