News December 19, 2024

ஜெயகொண்டம் அருகே சங்கிலி பறிப்பு: 2 பேர் கைது

image

ஜெயகொண்டம் அடுத்த விழப்பள்ளத்தை சேர்ந்த குழந்தை தெரஸ்(37) என்பவர் அணிந்திருந்த 10 பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றுள்ளனர். மேலும் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். மேலும் நேற்று ஜெயகொண்டம் போலீசார் தணிக்கையில் ஈடுபட்டபோது, முகமது பைசத் & முகமதுஷாஜகான் என்பவர்களை விசாரித்தனர். அப்போது அவர்கள் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்து, அவர்களை கைது செய்தனர்.

Similar News

News August 21, 2025

அரியலூர்: ஆன்லைனில் பட்டா பெறுவது எப்படி?

image

புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், <>eservices.tn.gov.in <<>>என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு நீங்கள் விண்ணப்பிக்கலம். SHARE பண்ணுங்க!

News August 21, 2025

அரியலூர்: இலவச காதொலிக் கருவி வழங்கல்

image

தமிழக அரசின் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகள் இலவச காது கேட்கும் கருவிகளை பெறலாம். கடந்த 3 வருடங்களுக்குள் மாற்றுத்திறனாளி சான்றிதழ் பெற்றவர்கள் ஆதார், புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இந்த முகாம் அரியலூர் மாவட்டத்திலும் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

News August 21, 2025

அரியலூர் மாவட்டத்தில் நாளை மின் தடை அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம், பாப்பாக்குடி, அய்யூர், பெரியகருக்கை ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (ஆக.,22) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் ஆண்டிமடம், விளந்தை, கூவத்தூர், மேலநெடுவாய், பட்டினங்குறிச்சி, காட்டாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணி முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!