News January 29, 2025
ஜெகதாப் பகுதியில் அக்கிரமிப்பு 22 வீடுகள் இடித்து அகற்றம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகதாப் பகுதியில் வசித்து வரும் சிலர் பொதுப்பாதை நிலங்களை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியுள்ளதாக அதே பகுதியைச் சோர்ந்த நாசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன்படி ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்ற உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இதையடுத்து காவல்துறை உதவியுடன் கிருஷ்ணகிரி வட்டாட்சியர் வளர்மதி தலைமையில் நேற்று 22 வீடுகள் இடித்து அகற்றப்பட்டது.
Similar News
News August 17, 2025
ஓசூர் தேசியநெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்

தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் பெங்களூர் நோக்கி படையெடுத்துள்ளதால் கிருஷ்ணகிரி ஓசூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி, மார்கெட் பகுதி, பேருந்து நிலையம், ரயில் நிலையம் என அனைத்து இடத்திலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுவதால் உள்ளூர்வாசிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
News August 17, 2025
கிருஷ்ணகிரி மாவட்டம் இன்று இரவு ரோந்து பணி விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 17) இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரர்களின் விவரங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். தங்களுக்கு அருகிலுள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் இருக்கும் அதிகாரிகளை அவசர தேவைகளில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகளின் தொடர்பு எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.
News August 17, 2025
கிருஷ்ணகிரி: திடீர் மின்தடையா ? உடனே CALL பண்ணுங்க!

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே 9498794987 என்ற பிரத்யேக TNEB சேவை எண் பயன்பாட்டில் உள்ளது . இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE