News May 11, 2024
ஜூலை 2இல் துணைத் தேர்வு?

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்நிலையில், தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத மாணவர்களின் எதிர்கால நலன் கருதி 10ஆம் வகுப்பு துணைத் தேர்வை ஜூலை 2ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் இந்தக் கல்வியாண்டிலேயே உயர் கல்வி பயிலத் தகுதியுடையோராவார். இதற்கான தேர்வு அட்டவணை இன்று (மே 11) வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
Similar News
News July 5, 2025
கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

திண்டிவனம் சந்தைமேடு புறவழிச்சாலையில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான எட்டியம்மன் கோவில் முன் பகுதியில் பூட்டு போட்டு வைத்திருந்த உண்டியலை கடப்பாறையால் உடைத்து அதில் இருந்த பணம் நகை உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் நேற்று இரவில் திருடி சென்றனர். சில நாட்களுக்கு முன் அம்மன் கழுத்தில் கிடந்த 3 கிராம் தங்க தாலி திருடு போன நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News July 5, 2025
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆட்சியரிடம் மனு

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மூலம் பிரதமர் மற்றும் தமிழக முதல்வருக்கு மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்டச் செயலாளர் தோழர் ஆர். கலியமூர்த்தி தலைமையில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். உடன் மாவட்ட துணை செயலாளர் பாலசுப்ரமணியன் மாவட்டத் தலைவர் எம்.ஐ சகாபுதீன் கலந்து கொண்டனர் .
News July 4, 2025
விழுப்புரம்: இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (ஜூலை 4) இரவு 10:00 மணி முதல் நாளை காலை 6:00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவல் அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் அல்லது 100 அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.