News June 5, 2024
ஜூன் 21ல் கள்ளழகர் கோயிலில் முக்கனி உற்ஸவம்

மதுரை, அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில், ” முக்கனி உற்ஸவம் ” ஜூன் 21ல் நடக்கிறது.
ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு அன்று மாலை 6:15 முதல் இரவு 7:00 மணிக்குள் கோயிலின் ஆஸ்தான மண்டபத்தில் முக்கனி உற்ஸவம் நடக்கிறது.
தலைமை பட்டர் அம்பி கூறுகையில், ”ஆண்டுதோறும் ஆனி மாத பவுர்ணமி நாளன்று பெருமாள், தாயாருக்கு மா, பலா, வாழை என முக்கனிகளால் நைவேத்யம் செய்யப்பட்டு பூஜை, தீபாராதனை நடைபெறும்” என்றார்.
Similar News
News March 3, 2026
மதுரை: பள்ளி மாணவி தற்கொலை; அதிர்ச்சி காரணம்

திருமங்கலத்தைச் சேர்ந்த சிறுமி அரசு பெண்கள் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். பொதுத்தேர்வு தொடங்க இருப்பதால் படிக்குமாறு பெற்றோர் அழுத்தம் கொடுத்ததனால் விரக்தி அடைந்த மாணவி சரிதா நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். விபத்து குறித்து திருமங்கலம் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
(மாணவர்கள் தற்கொலை குறித்த எண்ணம் வந்தால் 104ஐ அழைக்கவும்; தற்கொலை தீர்வல்ல.!)
News March 3, 2026
மதுரை: பணத்தை திருப்பி கேட்ட பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

மதுரை, காமராஜர் சாலையை சேர்ந்த மஞ்சுளா(45), தனியார் டிரைவிங் பள்ளி அலுவலகத்தில் பணியாற்றுகிறார். இவரிடம் தெற்குவாசலை சேர்ந்த கேசவன்(30) ரூ.8 லட்சம் கடன் வாங்கியிருந்தார். மஞ்சுளா பணத்தை திருப்பி கேட்டு வந்ததால் ஆத்திரமடைந்த கேசவன், வீட்டிற்கு சென்று தோசைக்கல்லால் தாக்கி கழுத்தை நெரித்து கொலை முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. புகாரின் பேரில் தெப்பகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
News March 3, 2026
மாநகர காவல் இரவு ரோந்து அதிகாரிகள்

மதுரை மாநகரில் காவல்துறையின் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி துணை ஆணையர் மாரிச்சாமி தெற்கு பகுதிகளிலும், துணை ஆணையர் இலக்கியா வடக்கு பகுதிகளிலும் தலைமை ஏற்று ரோந்து பணிகளை கண்காணிப்பர். மேலும் சரக காவல் ஆய்வாளர்களின் தொடர்பு எண்கள் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ரோந்து இடங்களில் இதில் அறிவிக்கப்பட்டுள்ளது.


