News January 31, 2025

ஜி.எஸ்.டி. சாலையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க திட்டம்

image

ஜி.எஸ்.டி. சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கிளம்பாக்கம் – மகேந்திராசிட்டி இடையே சுமார் ரூ.3,500 கோடி மதிப்பீட்டில் 18.4 கி.மீ., தூரத்திற்கு 6 வழி உயர்மட்ட சாலை அமைக்க நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளது. ஐயன்சேரி சந்திப்பு, சிங்கபெருமாள் கோவில் மற்றும் காட்டாங்குளத்தூர் ஆகிய பகுதிகளில் நுழைவு பாதை மற்றும் வெளியேறும் பாதைகள் அமைக்கப்படவுள்ளன. இதனால் நேரிசல் குறையும்.

Similar News

News March 2, 2026

செங்கை: சொந்த வீடு கட்ட அரசு தரும் சூப்பர் OFFER!

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<> pmay-urban.gov.in <<>>என்ற இணையதளம் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News March 2, 2026

செங்கல்பட்டு: சாதனை படைத்த LKG சிறுவன்!

image

சென்னை தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர் பகுதியில் “தமிழரும், சிலம்பமும்” என்ற தலைப்பில் பாரம்பரிய கலையான சிலம்பத்தில் ஒற்றை கம்பை சுற்றி ‘நோபல் உலக சாதனை’ படைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் தாம்பரம் பகுதியை சேர்ந்த LKG படிக்கும் 4 வயது சிறுவன் ஆரண் திகழ் விராட்ஜ் இடைவிடாமல் தொடர்ந்து 1 மணிநேரம் 7 நிமி டம் சிலம்பம் சுற்றி நோபல் உலக சாதனை படைத்தார்.

News March 2, 2026

செங்கல்பட்டில் கொடூரத்தின் உச்சம்

image

கொளத்தூரை சேர்ந்த பிரதீப்(35)- லியா(28) தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். மனைவி நடத்தியில் கொண்ட சந்தேகத்தால் இருவருக்கும் அடிக்கடி செண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் லியா தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது 2 மகள்களுடன் மாமல்லபுரம் சென்ற பிரதீப் விடுதியில் 2 மகள்களை தண்ணீரில் தலையை முக்கி கொலை செய்து தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.சிகிச்சையில் இருந்து குணமானதால் அவர் கைது செய்யப்பட்டார்.

error: Content is protected !!