News August 26, 2024

ஜார்க்கண்ட் மாநில வாலிபர்களை கடத்திய 5 பேரிடம் விசாரணை

image

ஜோலார்பேட்டை அருகே ஜார்க்கண்ட் மாநில வாலிபர்களிடம் கடந்த 19 ஆம் தேதி வேலை வாங்கித் தருவதாக கூறி 7 பேர் தனி அறையில் அடைத்து வைத்து அவர்களை 10 பேர் தாக்கி பணத்தை பறித்து காரில் கடத்திச் சென்று வேலூர் மாவட்டம் பள்ளிக்கொண்டா அருகே விட்டு விட்டு சென்றனர். இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநில வாலிபர்கள் கொடுத்த புகாரில், ஏற்கனவே அரவிந்த் என்பவர் கைது செய்த நிலையில், நேற்று மேலும் 5 பேரை போலீசார் பிடித்தனர்.

Similar News

News October 31, 2025

திருப்பத்தூர் காவல்துறையின் எச்சரிக்கை

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று (அக்.31) திருப்பத்தூர் மாவட்ட மக்களுக்கு இணையதளத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, இணையதளத்தில் வரும் போலியான வாடிக்கையாளர் எண்களை நம்பி அவர்களிடம் பேசி உங்களது பணத்தை இழக்க வேண்டாம். வாடிக்கையாளர் எண்களின் உண்மை தன்மையை ஆய்வு செய்து பின் தொடர்பு கொண்டு பேசவும். இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தி உள்ளது.

News October 31, 2025

திருப்பத்தூர்: 12 சிவலிங்கங்கள் உள்ள அற்புதக்கோயில்

image

பிரம்மபுரீஸ்வரர் கோயில், தமிழ்நாட்டின் திருப்பத்தூரில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற இந்து கோயில். இதனை 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த சுந்தரர் இந்தக் கோயிலைப் பற்றியும், பிரம்மபுரீஸ்வரரைப் பற்றியும் தன் பாடல் மூலம் புகழ்ந்துள்ளார். பின் வளாகத்தில் சுயம்பு லிங்க வடிவில் பிரம்மபுரீஸ்வரர் மற்றும் தேவி பிரம்ம சம்பத் கௌரி தலைமை தெய்வங்களாக உள்ளனர். பின் கோயிலில் 12 சிவலிங்கங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

News October 31, 2025

திருப்பத்தூர்: கேன் வாட்டர் குடிப்போர் கவனத்திற

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. (SHARE பண்ணுங்க)

error: Content is protected !!