News December 2, 2024

ஜல்லிக்கட்டு போட்டியில் கார், பைக் பரிசு வழங்க தடை கோரி வழக்கு

image

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் கார், பைக் போன்ற பரிசுகள் வழங்குவதை தவிர்த்து, விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகளை வழங்க உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் மானகிரி செல்வகுமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். வழக்கை இன்று விசாரித்த நீதிபதி ‘மனுதாரர் கோரிக்கை தொடர்பாக அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

Similar News

News August 20, 2025

மதுரை: மகால் பகுதியில் புற காவல் நிலையம் திறப்பு

image

எப்போதும் பரபரப்பாக காணப்படும் மதுரை திருமலை நாயக்கர் மஹால் தூய மரியன்னை பேராலயம் அருகே புதிதாக பொதுமக்களின் நலனுக்காக புற காவல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதனை மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் லோகநாதன் கலந்து கொண்டு பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இந்நிகழ்வில் காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

News August 19, 2025

மதுரை: கூட்டு பட்டாவை தனிபட்டாவாக மாற்ற எளிய வழி!

image

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற இங்கு <>க்ளிக்<<>> செய்து பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்தல் தேர்ந்தெடுத்து தனிபட்டாவாக மாற்ற பின்வரும் ஆவணங்களை இணைக்க வேண்டும்…
✅கூட்டு பட்டா,
✅விற்பனை சான்றிதழ்,
✅நில வரைபடம்,
✅சொத்து வரி ரசீது,
✅மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE பண்ணுங்க..

News August 19, 2025

மதுரை: கணவன் அடித்தால் உடனே CALL பண்ணுங்க!

image

குடும்ப வன்முறை எதிர்கொள்ளும் தென்காசி மாவட்ட பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு. குடும்பத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில் அதை தடுக்க அரசு பல சேவைகளை வழங்குகிறது. நீங்கள் ஏதாவது வன்முறையை எதிர்கொண்டால், உடனடியாக மாவட்ட குடும்ப வன்முறை தடுப்பு சட்ட பாதுகாப்பு அலுவலர் 9942656138 என்ற எண்ணில் அழைத்து புகார் அளிக்கலாம். இது உங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!