News January 16, 2026
ஜல்லிக்கட்டு நாயகன் கீழையூர் டொங்கான் காலமானார்

ஜல்லிக்கட்டு நாயகன்களில் முக்கியமானவரான கருப்பணன்(எ) கீழையூர் டொங்கான் உடல்நலக்குறைவால் காலமானார். 1965-ல் முக்கம்பட்டியில் முதல் ஜல்லிக்கட்டு போட்டியில் களமிறங்கிய அவர், 30 ஆண்டுகளுக்கும் மேலாக களத்தில் காளைகளை தழுவினார். ஆயிரக்கணக்கான மாடுபிடி, ஜல்லிக்கட்டு வீரர்களை உருவாக்கிய இவர், இத்தாலி நாட்டின் பரிசுகளையும் வென்று அசத்தியுள்ளார். பொங்கல் நாளில் அவரது மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News January 30, 2026
குழந்தைகள் போனை தூரம் வைக்க இத பண்ணுங்க!

குழந்தைகள் பலரும் இளம் வயதிலேயே போனுக்கு அடிமையாகி வருகின்றனர். இப்பழக்கத்தை கைவிட, இந்த ட்ரிக்ஸை பயன்படுத்துங்க ✦பெற்றோர்கள் குழந்தைகளுக்கு முன், போன் உபயோகத்தை குறையுங்க. பெற்றோர் செய்வதைத்தான் பிள்ளைகள் பின்பற்றுவார்கள் ✦குழந்தைகளை வீட்டுக்குள் கட்டிப்போட வேண்டாம். ஏரியாவில் இருக்கும் மற்ற குழந்தைகளுடன் வெளியில் சென்று விளையாடுவதை ஊக்குவியுங்கள் ✦ஏதாவது கலைத் திறனில் அவர்களை ஈடுபடுத்துங்க.
News January 30, 2026
சண்டையில் சாவு என சொல்வது குற்றமில்லை.. கேரள HC தீர்ப்பு

சண்டையின்போது ‘போய் சாவு’ என்று சொல்வதை தற்கொலைக்கு தூண்டியதாக எடுத்துக்கொள்ள முடியாது என்று கேரள HC தீர்ப்பளித்துள்ளது. தகாத உறவில் இருந்த இருவரிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, கோபத்தில் செத்து போ என்று கூறியதால், பெண் தற்கொலை செய்து கொண்டார். இந்த குற்றச்சாட்டு மீதான வழக்கை விசாரித்த நீதிமன்றம், கைது செய்யப்பட்டவரின் தண்டனையை ரத்து செய்துள்ளது.
News January 30, 2026
துணை முதல்வராகிறாரா அஜித் பவாரின் மனைவி?

அஜித்பவார் விமான விபத்தில் இறந்ததை தொடர்ந்து, அவர் வகித்த DCM பதவிக்கு யாரை தேர்ந்தெடுப்பது என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், அஜித் பவாரின் மனைவியும், MP-யுமான சுனேத்ரா பவார், DCM-ஆக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சியின் மூத்த தலைவர்களின் கோரிக்கையை சுனேத்ரா ஏற்றுக் கொண்டதாகவும், மறைந்த அஜித் பவாரின் பாராமதி தொகுதி இடைத்தேர்தலிலும் போட்டியிட முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


