News April 16, 2025
ஜல்லிக்கட்டில் பங்கேற்க தாயார் எதிர்ப்பு-மாணவர் தற்கொலை!

வேப்பந்தட்டையை அடுத்துள்ள பூலாம்பாடியைச் சேர்ந்த முத்தையா (23) என்பவர் பெரம்பலூரில் உள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற்கல்வி பயின்று வந்துள்ளார். இவர் பூலாம்பாடியில் நடந்த ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டு காளைகளை அடக்கப் போவதாக வீட்டில் கூறியுள்ளார். இதற்கு அவரது தாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் மனமுடைந்த முத்தையா அவரது வயலுக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
Similar News
News September 21, 2025
பெரம்பலூரில் கல்வி கடன் வழங்கிய அமைச்சர்

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்து வங்கிகளின் சார்பில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக துணை மருத்துவ அறிவியல் கல்லூரியில், நடத்தப்பட்ட கல்வி கடன் முகாமினை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார். மேலும் மாணவர்கள், மாணவிகளுக்கு கல்விக் கடன்களை வழங்கினார். அவருடன் மாவட்ட ஆட்சித் தலைவர் மிருணாளினி கலந்து கொண்டார்.
News September 21, 2025
மாநில துணை தலைவராக பெரம்பலூரை சேர்ந்தவர் நியமனம்

காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி துறை மாநில துணை தலைவராக பெரம்பலூர் மாவட்டத்தை சார்ந்த மகேஷ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி துறையின் மாநில தலைவர் ரஞ்சன்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இதனை தெரிவித்துள்ளார். மாநில பொறுப்பில் நியமிக்கப்பட்ட மகேஷ், மாநில மாவட்ட வட்டார தொகுதி தலைவர்கள் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
News September 21, 2025
பெரம்பலூர்: ஆவின் நிறுவனத்தில் வேலைக்கு போகலாம்!

தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் இலவச ‘பால் கணக்கெடுப்பு, அக்கவுண்டிங்’ பயிற்சி வழங்கப்படுகிறது. 20 நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சியில் தினசரி பால் கணக்கீடு, கலெக்ஷன், நிர்வாகம் உள்ளிட்டவை சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படும். இதில் பயிற்சி பெற்றால் ஆவின் நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பை பெறலாம். இதற்கு விண்ணப்பிக்க இங்கே <