News January 16, 2026
ஜம்மு-காஷ்மீரின் எல்லை பகுதிகளில் பதற்றம்

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச், சாம்பா மாவட்டங்களில் உள்ள எல்லைப் பகுதிகளில், பாக்., ட்ரோன்கள் மீண்டும் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ட்ரோன் ஊடுருவல் குறித்து <<18852930>>இந்திய ராணுவம்<<>>, சில நாள்களுக்கு முன்புதான் பாக்.-ஐ எச்சரித்தது. இந்நிலையில், மீண்டும் ட்ரோன்கள் பறந்ததால், அவற்றை இந்திய படையினர் சுட்டு வீழ்த்தினர். இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
Similar News
News January 22, 2026
அரியலூர்: 21 புதிய நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

அரியலூர் மாவட்டத்தில், KMS 2025−26-ஆம் ஆண்டு சம்பா பருவத்தில் சாகுபடி செய்துள்ள நெல்லினை, கொள்முதல் செய்வதற்கு ஏதுவாக ஓலையூர், விழுதுடையான், பெரியாத்துகுறிச்சி, விளந்தை, காடுவெட்டி, கங்கைகொண்ட சோழபுரம், சோழமாதேவி, இடங்கண்ணி, தென்கச்சி பெருமாள்நத்தம், வாழைக்குறிச்சி, காரைக்குறிச்சி உள்ளிட்ட 21 கிராமங்களில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கபட உள்ளது. என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News January 22, 2026
இனி வீட்டிலிருந்தே பத்திரப்பதிவு… நோ டென்ஷன்!

பத்திரப் பதிவுத்துறையின் 18 சேவைகளை உள்ளடக்கிய ஸ்டார் 3.0 செயல் திட்டத்தினை CM ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இதில் வீட்டிலிருந்தபடியே காகிதமில்லா ஆவணப்பதிவு, தானியங்கி பத்திர உருவாக்கம், திருமணப் பதிவு உள்பட முக்கிய சேவைகள் இடம்பெற்றுள்ளன. மேலும் எந்த முறைகேடும் இன்றி தொழில்நுட்ப உதவியுடனும், வெளிப்படை தன்மையுடன் பத்திரப்பதிவு நடைபெற வேண்டி இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 22, 2026
BREAKING: நடிகர் முரளி கிருஷ்ணா காலமானார்

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகியின் மகன் முரளி கிருஷ்ணா (65) காலமானார். ஜானகியின் ஒரே மகனான இவர் பரதநாட்டிய கலைஞர் ஆவார். அத்துடன், ’விநாயகுடு’, ‘மெல்லபுவு’ போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ள இவர், ‘கூலிங் கிளாஸ்’ என்ற மலையாள படத்தில் எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். இவரது மறைவுக்கு, திரையுலகினர் மற்றும் எஸ்.ஜானகியின் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


