News May 20, 2024
ஜமாத் தலைவருக்கு எஸ்டிபிஐ தலைவர் இரங்கல்

நெல்லை மாநகர டவுன் பள்ளிவாசல் ஜமாத் தலைவரும், பிரபல தொழிலதிபருமான ஷாகுல் ஹமீத் இன்று உயிரிழந்தார். அவரின் மறைவிற்கு எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி இன்று (மே 20) இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவரை இழந்து வாடும் ஜமாத்தினருக்கும் குடும்பத்தினருக்கும் இரங்கல் தெரிவிப்பதாக அதில் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 18, 2026
5 மாவட்ட பயிற்சியாளர்களுக்கு தடகளப் போட்டி தேதி அறிவிப்பு

நெல்லை மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள செய்தி குறிப்பு 2025 – 26ம் ஆண்டிற்கான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி, விருதுநகர் மாவட்டங்களை உள்ளடக்கிய நெல்லை மண்டல பயிற்சியாளர்களுக்கான தடகள விளையாட்டு போட்டி 24ம் தேதி காலை 9 மணி முதல் பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. அந்தந்த மாவட்ட தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற அரசு, தனியார் தொழிற் பயிற்சி நிலைய ஆண், பெண் பயிற்சியாளர்கள் பங்கேற்பார்கள்.
News February 18, 2026
நெல்லை: குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 நிதியுதவி

மத்திய அரசின் ‘மிஷன் வத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு குழந்தைகளுக்கு, மாதம் தலா ரூ.4,000 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை பெற வருமானச் சான்றிதழ் மட்டுமே போதுமானது. நீங்கள் இ-சேவை மையம் மூலமாகவோ அல்லது மதுரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். SHARE IT
News February 18, 2026
திருநெல்வேலி: வீடு புகுந்து பெண்ணுக்கு அரிவாள் வெட்டு

நெடுவிளையைச் சேர்ந்தவர் பொன்ராஜ். இவரது மனைவி தனஷ்(23). இவர் பகலில் வீட்டில் தனியாக இருந்தபோது ‘மழை கோட்’ அணிந்து வந்த பெண் ஒருவர் தனஷ் முகத்தை துணியால் மூடி அவரை அரிவாளால் வெட்டி விட்டு, அவர் கழுத்தில் அணிந்திருந்த ரூ.8 லட்சம் மதிப்புள்ள தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிந்து பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


