News January 22, 2025

ஜன.26 ஆம் தேதி கிராம சபை கூட்டம்; கலெக்டர் அறிவிப்பு

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”எதிர்வரும் 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று நீலகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார். அன்றைய தினம் காலை 11 மணியளவில் துவங்கும் கிராம சபை கூட்டத்திற்கு பொதுமக்கள் திரளாக பங்கு கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Similar News

News November 6, 2025

நீலகிரி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

நீலகிரி மக்களே.. வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!

News November 6, 2025

நீலகிரி: இதை செய்தால் பணம் போகும்!

image

நீலகிரி மக்களே, கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்க. அதாவது, WhatsApp, SMS மூலம் போக்குவரத்து விதிமுறை அபராதம் எனக் கூறி வரும் போலி E-Challan மெசேஜ்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தைகயை எஸ்எம்எஸ்-ல் உள்ள இணைப்புகளை அழுத்தினால் வங்கி கணக்குகள் காலியாகும் அபாயம் உள்ளது. எனவே, உஷாராக இருங்க மக்களே! இதை உங்கள் நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News November 6, 2025

நீலகிரியில் அரசு பேருந்து விபத்து!

image

நீலகிரி மாவட்டம், கூடலூரில் இருந்து கேரள மாநிலம் சுல்தான் பத்தேரிக்கு நேற்று அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. நாடுகாணி பாண்டியாறு குடோன் அருகே சென்றபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிளுக்கு வழிவிடுவதற்காக டிரைவர் பேருந்தை திருப்ப முயன்றார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோர மரத்தில் மோதியது. இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. ஆனால், அதிர்ஷவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.

error: Content is protected !!