News May 30, 2024
ஜன்னல் உடைத்து 2 சவரன் தங்க நகை திருட்டு

ஜோலார்பேட்டை அருகே ஆசிரியர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் திலீப்குமார் (வயது 41). இவர் நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்துடன் தூங்கி கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று காலை எழுந்து பார்த்தபோது தனது வீட்டின் மற்றொரு அறையில் ஜன்னல் கம்பி உடைத்து ஜன்னல் வழியாக வீட்டுக்குள் நுழைந்து பீரோவில் வைத்திருந்த 2 சவரன் தங்க நகை, 150 கிராம் வெள்ளி நகைகள் திருடுப் போனது. இது குறித்து போலிசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News July 10, 2025
ஏலகிரியில் வானொலி நிலையம் தொடங்கப்படுமா?

திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் வானொலி நிலையம் தொடங்கப்படும் என கடந்த 2009ஆம் ஆண்டு அப்போதைய செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சர் ஜெகத்ரட்சகன் கோடை விழா நிகழ்ச்சியின் போது அறிவித்தார். ஆனால் இன்று வரை ஏலகிரி மலையில் வானொலி நிலையம் தொடங்கப்படாமல் உள்ளது. ஆகவே எப்போது வானொலி நிலையம் தொடங்கப்படும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
News July 10, 2025
திருப்பத்தூர் எஸ்பி அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் நேற்று 09.07.2025 வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் கோவிந்தராசு., ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது. இக்குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 55 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
News July 9, 2025
சரக்கு வாகனம் மோதி இளைஞர் சம்பவ இடத்திலேயே பலி

நாட்றம்பள்ளி அடுத்த பச்சூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் மீது சரக்கு வாகனம் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், இளைஞர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த நாட்டறம்பள்ளி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.