News December 17, 2025

ஜனாதிபதி முர்முவை வரவேற்ற வேலூர் கலெக்டர்!

image

ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது சுற்றுப்பயணத்தை நேற்று முதல் தொடங்கி, வருகிற 22-ந் தேதி வரை கர்நாடகா, தமிழ்நாடு, தெலுங்கானா மாநிலங்களில் மேற்கொள்கிறார். இந்நிலையில் இன்று (டிச.17) திருப்பதி ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோவிலுக்கு 11:30 மணிக்கு வருகை தந்தார். அவரை வேலூர் கலெக்டர் சுப்புலெட்சுமி, பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

Similar News

News December 18, 2025

வேலூர் மாவட்டத்தில் 4,726 பேர் எஸ்ஐ தேர்வு எழுத உள்ளனர்

image

சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பித்த, பொதுப்பிரிவினர் மற்றும் துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு, முதன்மை தேர்வு, தமிழ் தகுதித்தேர்வு வரும் டிச.21-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள விஐடி பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் 996 பெண்களும், 3,730 ஆண்களும் என மொத்தம் 4,726 தேர்வு எழுத உள்ளனர் என மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 18, 2025

வேலூர்: மைனர் பெண்ணை திருமணம் செய்த வாலிபர்!

image

பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம் போயர் தெருவை சேர்ந்தவர் சிவா (28). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். பணி நிமித்தமாக ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதிக்கு சென்றபோது அங்கு 17 வயது மைனர் பெண்ணுடன் சிவாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனால் அவரை வெட்டுவானம் அழைத்து வந்து ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டுள்ளார். நேற்று தகவலறிந்த பள்ளிகொண்டா போலீசார் சிவா மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News December 18, 2025

வேலூர்: உங்கள் PAN Card-இல் இது கட்டாயம்!

image

வேலூர் மக்களே, நமது அத்தியாவசிய தேவைகளை பெறுவதற்கு, நமக்கு PAN Card தேவைப்படுகிறது. இந்த நிலையில், மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் (CBDT) டிச.31 ஆம் தேதிக்குள் பான் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க அறிவுறுத்தியுள்ளது. இதற்காக நீங்கள் நேரடியாக எங்கும் அலைய வேண்டியதில்லை. இந்த லிங்க்கை <>கிளிக்<<>> செய்து உங்கள் ஆதார் அட்டை, PAN card உடன் இணைக்கப்பட்டுள்ளதா என தெரிந்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!