News January 24, 2025
ஜகபர் அலி கொலை; விசாரணை அதிகாரி நியமனம்

புதுக்கோட்டை, திருமயம் அருகே வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜகபர் அலி சட்டவிரோத கனிம கொள்ளைக்கு எதிராக போராடியதால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை ஜன.22 அன்று சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, விசாரணை அதிகாரியாக புவனேஷ்வரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக ஏற்கெனவே 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று குவாரி உரிமையாளர் ராமையா காவல்நிலையத்தில் சரணடைந்தார்.
Similar News
News August 27, 2025
புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து காவலர்கள் விபரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (ஆக.,26) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்றால் இந்த எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
News August 26, 2025
புதுகை: தேர்வு இல்லாமல் ரயில்வேயில் வேலை

புதுக்கோட்டை மக்களே.. இந்திய தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 3,518 அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் திருச்சி, பொன்மலை டிவிசனில் 697 பணியிடங்களுக்கு தேர்வு இல்லாமல் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு 10th, 12th மற்றும் ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் <
News August 26, 2025
புதுகை: தாசில்தார் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

சான்றிதழ்கள் வழங்குவது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா, சிட்டா, அடங்கல் சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை வட்டாட்சியரின் (தாசில்தார்) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் தாசில்தாரோ அல்லது அலுவலக ஊழியர் யாரவது உங்களிடம் லஞ்சம் கேட்டால், புதுக்கோட்டை மாவட்ட மக்கள் 04322-222355 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!