News October 26, 2025
சோழத்தரம்: தலை மறைவு கொலை குற்றவாளி கைது

ஆண்டிமடம் அடுத்த அழகாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(46), கூலி தொழிலாளி. இவரது மனைவி சரளா (39). சரளாவை 2012ம் ஆண்டு கொலை செய்த வழக்கில் அறுமுகம் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வந்து தலை மறைவானார். இந்நிலையில், இரண்டு தனிப்படைகள் அமைத்து தேடிய நிலையில், இன்று அவரை அழகாபுரத்தில் கைது செய்த போலீசார். பின்னர் சோழத்தரம் கொண்டு வந்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News February 4, 2026
கடலூர்: 261 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

கடலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் நெல் கொள்முதல் பருவமான நடப்பு கரீப்- 2025-2026 ஆம் ஆண்டு சம்பா பருவத்தில் 261 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, நெல் கொள்முதல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை விவசாயிகள் மட்டுமே பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், வியாபாரிகள் நெல் விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
News February 4, 2026
கடலூர்: CM Cell-ல் புகார் அளிப்பது எப்படி?

1. முதலில், <
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘Track Grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.
News February 4, 2026
கடலூர்: பைக் வாங்க அரசு மானியம்!

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க <


