News March 25, 2024
சோலைமலை முருகன் கோவிலில் பால்குடம் ஊர்வலம்

அழகர் மலையில் உள்ள சோலைமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு நேற்று காலை முதல் பக்தர்கள் பால்குடம் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். அழகர் மலை அடிவாரத்தில் இருந்து சோலைமலை முருகன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடங்கள் எடுத்து பாதயாத்திரையாக சென்று முருகனுக்கு பாலாபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர்.
Similar News
News October 27, 2025
மதுரை: உளவுத் துறையில் ரூ.1,42,400 சம்பளத்தில் வேலை

உளவுத்துறையில் காலியாக உள்ள Assistant Central Intelligence Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியின் வகை: மத்திய அரசு வேலை
பணியிடங்கள்: 258
1. வயது: 18-27 (SC/ST-32,OBC-30)
2. சம்பளம்: ரூ.44,900 –ரூ.1,42,400
3. கல்வித் தகுதி: Engineering (ECE,IT,CS)
4. கடைசி தேதி: 16.11.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
6. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.
News October 27, 2025
மதுரையின் புதிய மேயர் இவரா..?

மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு புகாரில் இந்திராணி, மேயர் பதவியை இழந்தார். புதிய மேயருக்கு கட்சியில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன், மாவட்ட செயலாளர் தளபதி ஆகியோரின் சிபாரிசுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. முன்னாள் மண்டல தலைவர்கள் வாசுகி, சரவணபுவனேஸ்வரி, கவுன்சிலர்கள் மகாலட்சுமி, ரோகிணி, லட்சிகா ஸ்ரீ, இந்திராகாந்தி பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
News October 27, 2025
மதுரையில் முன்விரோதத்தில் ஒருவர் கொலை

மதுரை புதுவிளாங்குடி யுவராஜ், 24. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஷியாம்குமார், சபா ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. யுவராஜ், அக்., 19 இரவு, நண்பர் சித்தனுடன் 19, வீட்டின் முன் பேசிக் கொண்டிருந்தார்.அப்போது ஷியாம்குமார், சபா உட்பட 6 பேர், வாள் உள்ளிட்ட ஆயுதங்களால் யுவராஜை வெட்டினர். மதுரை GH-ல் அனுமதிக்கப்பட்ட நிலையில், சித்தன் நேற்று இறந்தார்.4 பேரை கூடல்புதுார் போலீசார் கைது செய்தனர்.


