News April 1, 2025

சோதனை செய்த பிறகே தர்பூசணியை வாங்குங்கள்

image

கடைகளில் இருந்து தர்பூசணி பழங்கள் வாங்கும் போது மிகக் கவனமாக இருக்க வேண்டும். சோதனை செய்து பார்த்த பிறகே, தர்பூசணி பழத்தை வாங்குங்கள். ரசாயனம் சேர்க்கப்பட்ட தர்பூசணி பழங்கள் விரைவாக கெட்டு விடும் என்பதால், சில பழங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து அவற்றில் இந்த ரசாயனத்தை கலந்து ஜூஸ் போடுவதாகக் கூறப்படுகிறது. லாபம் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக பழங்களில் ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன.

Similar News

News February 15, 2026

விழுப்புரத்தில் ஒருவர் வெட்டிக் கொலை!

image

செஞ்சி வட்டம் மழவந்தாங்கல் கிராம டாஸ்மாக் கடை அருகில் வாசுதேவன் என்பவரின் மகன் அய்யனார்(42) தலையில் வெட்டு காயங்களுடன் நேற்று (பிப்.14) மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து கண்டாச்சிபுரம் போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News February 15, 2026

விழுப்புரத்தில் இளைஞர் துடி துடித்து பலி!

image

செஞ்சி அடுத்த சங்கீதமங்கலத்தை சேர்ந்தவர் நேர்மையானவன் (வயது 36) மோட்டார் சைக்கிளில் வேலை முடித்து வந்துகொண்டிருந்தார். அப்போது லலிதா (45) லிப்ட் கேட்டதால் ஏற்றிக்கொண்டு புறப்பட்டார். அப்போது திடீரென பைக் அங்குள்ள பாலத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே நேர்மையானவன் உயிரிழந்தார். லலிதா சிகிக்சை பெற்று வருகின்றார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 15, 2026

விழுப்புரத்தில் விவசாயி தற்கொலை முயற்சி!

image

பெண்னைவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்பாஸ், விவசாயி. இவர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ஜே.சி.பி., வாங்குவதற்காக தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியிருந்தார்.நிதி கட்டுமாறு நிறுவனத்தில் இருந்து கடனை கட்டுமாறு நோட்டீஸ் அனுப்பினர். கடனை திருப்பி செலுத்தவில்லை. இதையெடுத்து அவர் மீது நடவடிக்கை புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் அப்பாஸ் தன் மீது தீ மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்

error: Content is protected !!