News January 9, 2025
சொர்க்கவாசல் திறப்புக்கு 15,000 லட்டுகள் தயாரிக்கும் பணி

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் விட்டலபுரி பாண்டுரங்கர் கோவிலில் ஜனவரி 10ல் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நாளை நடைபெறுவதால் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுவது வழக்கம். இதை அடுத்து 15 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 10ல் அதிகாலை 05 மணியளவில் பரமபதவாசல் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு லட்டு விநியோகம் செய்யப்படும் கோவில் நிர்வாகம் தெரிவித்தனர்.
Similar News
News February 2, 2026
பரமத்திவேலூர் அருகே திடீர் தீ விபத்து!

பரமத்திவேலூர் அருகே உள்ள ஜங்கமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் அருள். இவருக்கு சொந்தமான லாரியில் வைக்கோல் கட்டுகளை ஏற்றிக்கொண்டு திருச்சியில் இருந்து கூடச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது ப.வேலூர் அருகே பில்லூர் பகுதியில் லாரி சென்றபோது திடீரென லாரியில் இருந்த வைக்கோல் கட்டுக்கள் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த நாமக்கல் தீயணைப்பு துறையினர், விரைந்து வந்து தீயை அணைத்தனர்
News February 2, 2026
ராசிபுரம் அருகே கோர விபத்து: இரு பெண்கள் பலி!

ராசிபுரம் அருகே பாச்சலைச் சேர்ந்த சண்முகம், தனது குடும்பத்தினர் 5 பேருடன் ஒரே டூவீலரில் காளிப்பட்டி கோவிலுக்குச் சென்று திரும்பும்போது, அடையாளம் தெரியாத கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பரிமளா மற்றும் சுதா ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயமடைந்த சண்முகம் மற்றும் இரு குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து புதுச்சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
News February 2, 2026
அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள, அனைத்து நியாயவிலை கடை பணியாளர்களும், இன்று (2-2-26) திங்கட்கிழமையும், நாளை (3-2-26) செவ்வாய்க்கிழமையும், தாயுமானவர் திட்டத்தின் கீழ் வயது முதிர்ந்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கே சென்று குடிமைப் பொருட்கள் வழங்கப்படவுள்ளனர். தகுதியுள்ள பயனாளிகள் இதைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.


